Tuesday, November 14, 2017

Trekking

நைனிடால் சென்ற போது படகு சவாரி வேண்டாம், அருகிலுள்ள பறவைகள் சரணாலயத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று tour organizers இடம் கேட்டிருந்தோம். ஆனால் இங்கு அங்கு என மாறி, மாறி பயணித்து சுமார் இரண்டு மணி நேரம் ஒன்றையும் காணாமல் வீணாக பொழுதைக் கழித்து விட்டோம். இதனால் மனம் வருந்திய எங்களிடம் மறுநாள் காலையில் சஃபாரிக்குப் பின் ' Bird Watching and Trekking on the banks of Kosi River' உண்டு என்று tour organizer கூறினார். நொந்த மனதிற்கு மருந்திடுவது போல என எண்ணிக்கொண்டு அந்த ட்ரெக்கிங் அனுபவத்திற்காக ஆவலுடன் காத்திருந்தேன்.
         நதிக்கரையில் என்றவுடன் நம்மூர்களில் ஓடும் நதிகள் ( எங்கே ஓடுகிறது என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்) படித்துறையில் இறங்கியவுடன் வந்து விடுவது போல் இங்கும் இருக்கும் என்று எண்ணிக் கொண்டது என் தவறு தான். நதியை அடைய சுமார் 100 அடி உயர கரடுமுரடான செங்குத்தான பாதையைக் காட்டி, இதில் இறங்க வேண்டும் என்றார்கள். எங்களுக்கு வழிகாட்ட கைடு போன்ற ஒருவர் இருந்தார். அவர் இருப்பதிலேயே சுலபமான வழி இது தான். நான் தினமும் இதில் நான்கைந்து முறை ஏறி இறங்குகிறேன் என்றார். நாங்கள் அனைவரும்  அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தோம். பின்னே... நாமெல்லாம் தெருமுனையில் இருக்கும் கடைக்குக் கூட ஸ்கூட்டரில் பறக்கும் ஆட்களல்லவா?! ' நம்பி வாருங்கள்..' என்று புன்னகையுடன் கூறி திரும்பிப் பார்க்காமல் சர சர வென இறங்கலானார். நாங்களும் நம்பிக்கை பெற்று இறங்கலானோம். ஆனால் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று பத்து அடி தூரம் இறங்கியவுடன் புரிந்தது. பிடித்துக் கொள்ள ஏதுவாக ஒன்றும் இல்லை. இருந்ததோ புற்களும் செடிகளும் தான். அவற்றை ஒரு கிரிப் புற்காக பிடித்தால் அவை கையோடு பெயர்ந்து வந்தன. வழியெங்கும் பாறைகள் மட்டுமே. சமயங்களில் பாறைகள் அசைந்தன. இவ்வளவு steep ஆனது எனத் தெரிந்திருந்தால் இறங்கியிருக்கவே மாட்டேன் என்று ரவி சொல்லிக் கொண்டே வந்தார். இளைஞர்கள் அனைவரும் கைகொடுத்து பெண்களையும், மற்றவர்களையும் இறக்கிவிட்டனர். அவர்களே மிகுந்த சிரமத்துடன் தான் இறங்கினர். இதில் காமெடி என்னவென்றால் அவர்களே மிகுந்த சிரமத்துடன் தான் இறங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் வாய் சவடாலாக,' அங்கிள், ஆண்ட்டி பாவம்... எப்படி இறங்குவார்கள்!' என உச் கொட்டிக் கொண்டே வந்தார்கள். அட்டா... நம்மை ஏதோ சீனியர் சிட்டிசன் ரேஞ்சுக்கு ஆக்குகிறார்களே என எனக்குத் தோன்றியது.
 ' We are FIT pa.. regular ஆக வாக்கிங் சென்று வருகிறோம்.'
        Breathtaking view என்று கூறுவார்களே.. அது என்ன என்று அன்று தான் உணர்ந்தேன். அழகிய பசுமையான தோற்றம். சுமார் நூறு அடி உயரமெங்கும். இத்தனை தூரம் நாம் இறங்கி வந்து விட்டோமா என்று எனக்கே மிக ஆச்சர்யமாக இருந்தது. நதியில் தண்ணீர் அங்கும் இங்குமாகத் தேங்கி இருந்தது. சிறிதும் பெரிதுமான கற்கள். மலையிலிருந்து ஆற்று நீரால் அடித்து வரப்பட்ட கற்கள். கைடு, காலை வேளையில் அடர்ந்த மரங்களிலிருந்து பறவைகள் வந்த வண்ணம் இருக்கும். இப்போது இல்லை, இனி மாலையில் திரும்ப வரும் என்றார்.பைனாகுலர் மற்றும் காமிராக்கள் மூலம் இலைகளின் ஊடே நாங்கள் தேடினோம் ஒன்றும் புலப்படவில்லை. ஆற்று நீரில் ,தெளிந்த நீரோடையில் மீன்கள் நீந்திய வண்ணம் இருந்தன. சிறுமி ஒருத்தி எங்களுடன் பயணித்தாள். அவள் ஆவலுடன் மீன்களை ரசித்துக் கொண்டிருந்தாள்.இளைஞர் ஒருவர் கைக்குட்டையைப் பயன்படுத்தி மீன்களைப் பிடிக்க முயன்றார். பெண்களின் கும்பலோ செல்ஃபி எடுப்பதில் மூழ்கியது. அகண்ட பரப்பில் அனைவரும் ஒரே மாதிரி நீல வண்ண டி சர்ட் அணிந்து இங்கும் அங்குமாக உலவிக் கொண்டிருந்தோம். பார்ப்பதற்கு அழகாக இருந்தது. 
          Trekking இந்தப் பக்கம் சிறிது தூரம் செல்லலாம் அல்லது அந்தப்பக்கம் சிறிது தூரம் செல்லலாம் என்று கைடு அழைத்துக் கொண்டே இருந்தார். ஆனால் யார் காதிலும் விழவே இல்லை. அன்று திங்கட்கிழமை. ஆதலால் பணிநிமித்தம் ஆண்கள் பலருக்கும் ஃபோன் கால்கள் வந்து கொண்டே இருந்தன. Designer ஆகப் பணிபுரியும் பெண் ஒருவரும் எங்களில் இருந்தார். அவர் தன் client களிடம், ' நான் சில நாட்களுக்கு இருக்க மாட்டேன். அதற்குப் பதில் என்னுடைய உதவியாளர் இருப்பார். உங்கள் தேவையை நீங்கள் அவரிடம் கூறலாம். அவருக்கு கன்னடம் மட்டுமே தெரியும். ஆனால் ஒன்று கூறிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் என்னிடம் எதிர்பார்க்கும் அதே சேவையை அவனிடம் எதிர்பார்க்க முடியாது' என்று கூறிக் கொண்டிருந்தார். பெரும்பாலும் அனைவரும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தனர். எனக்கு இந்தி புரியும் என்பதால் சில சமயங்களில் என்ன சொல்கிறார்கள் என்று ரவி கேட்கும் போது நான் மொழி பெயர்த்துக் கூறுவேன். 
           இப்படியே அரை மணி நேரம் கழிந்தது. திரும்ப கிளம்ப வேண்டிய நேரம் வந்தது. வந்த வழியே தான் செல்ல வேண்டுமா, வேறு வழி எதுவும் உள்ளதா என்று அனைவரும் ஏக்கமாக கைட் ஐ வினவினர். ' இருப்பதிலேயே சுலபமான வழி இது தான். இறங்குவதை விட ஏறுவது சுலபம். இறங்கும் போது பள்ளம் இருந்தால் பாரத்துப் பார்த்து காலை வைத்து இறங்க வேண்டும். இப்போது ஒரே மூச்சாக ஏறிவிடுங்கள்.' என்றார். நான் திரும்பி ரவியிடம் விளக்க முற்பட்ட போது,' புரிந்து விட்டது. வந்த பாதையிலேயே தான் திரும்ப ஏற வேண்டும். அப்படித்தானே?' என்றார். கைட் புன்னகையுடன்,'ஜி..சாப்..' என்றார். ' உங்கள் காமிராவை வேண்டுமென்றால் நான் தூக்கிக் கொள்கிறேன்' என்றார். சந்தோசமாக அவரிடம் ஒப்படைத்து விட்டு ஏற ஆரம்பித்தோம். 
       படபடவென நெஞ்சு அடித்தது. எகிடுதகிடாக heartbeat ஏறியது. இரண்டு இடங்களில் உட்கார்ந்து ஏறினோம். கால்கள் நடுங்கின. என்றாலும் மனம் தளராமல் ஏறினோம். வெகு தூரம் கடந்து வந்தாற் போல உணர்வு. ஏக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தால் பாதி தூரமே கடந்திருந்தோம். ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் ஏறினோம். ஏசா ஐலசா என்று பாடாத து ஒன்று தான் பாக்கி.கடைசியில் அனைவரும் ஏறி விட்டோம். ஐயோ.. அம்மா என்று புலம்பியவாறு வண்டிக்கு நடந்தோம்.உஸ்...உஸ்..உஸ்.. என்ற பெரு மூச்சு அனைவர் வாய்களிலும். 
            இந்த அனுபவத்தின் போது எடுத்த புகைப்படங்களை tour guide சொன்னது போல் bird watching and trekking on the banks of River Kosi என்ற தலைப்பிட்டு whatsappஇல் என் நண்பர்கள் மத்தியில் share செய்தேன். அவர்களுக்கு உற்சாகம் கரை புரண்டு விட்டது. ' sounds interesting.. please share your experiences ' என்று வேண்டிக் கேட்டனர். எனக்கோ ஒரே ஆச்சர்யம் ' என்ன experience இருந்தது ? share பண்ண்ணுவதற்கு! ' என்று. சரி , கேட்டதைச் செய்வோம் என்று துணிந்து எழுதிவிட்டேன்...ஆனால் மனதிற்குள் ஒரு சிறு சந்தேகம்.. இனி இது போல் துணிந்து கேட்பார்களா? share பண்ணச் சொல்வார்களா?!... ஆனால் நம்பிக்கை தானே வாழ்க்கை! நம்பிக்கை கொள் மனமே!
- முருகேஸ்வரி ரவி.
    



ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட், நைனிடால் போன்ற ஊர்களின் பெயர்களை சிறு வயதில் புவியியல் பாடப்புத்தகங்களில் படித்த ஞாபகம். அவற்றைப் பற்றி வேறு ஒன்றும் தெரியாது. சில நாட்களுக்கு முன் பெங்களூரு சென்றிருந்த போது நண்பன் அசோக் குமார் மூலம் விஷ்ருத் எனும் இளைஞரின் தொடர்பு கிடைத்தது. அவரும் புகைப்படக்கலை மற்றும் wild life இல் ஆர்வம் உள்ளவர். அக்டோபர் மாதத்தில் ஜிம் கார்பெட் பயணம் செய்கிறோம், நீங்களும் வாருங்கள் என அழைத்தார். உற்சாகத்துடன் ஒத்துக் கொண்டேன். முதல் ஆளாய் எனக்கும் முருகேஸ்வரிக்கும் பணத்தைக் கட்டினேன். அந்தப் பயண அனுபவத்தை உங்களுடன் இப்போது பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
       அதற்கு முன் ஜிம் கார்பெட் பற்றி...இந்தியாவின் மிகப் பழமையான சரணாலயங்களில் ஒன்று. உத்தர்காண்ட் மாநிலத்தின் நைனிடால் மாகாணத்தில் அமைந்த இந்தப்பூங்கா wild life tourist களின் விருப்பத் தேர்வாகும். அதன் அடர் வனப்பகுதியும், பல தரப்பட்ட தாவரங்களும், விலங்குகளும் இயற்கை விரும்பிகளுக்குப் பெரும் தீனி ஆகும். இதன் பரப்பளவு கிட்டத்தட்ட 200 சதுர மைல்கள் ஆகும். அழிந்து கொண்டிருந்த விலங்குகளையும், காட்டையும் பெரு முயற்சி செய்து காப்பாற்றிய எழுத்தாளரும், இயற்கை ஆர்வலருமான ஜிம் கார்பெட் நினைவாக இப்பெயர் 1955இல் சூட்டப்பட்டது.
          சரி.. இனி பயணம் பற்றி. பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே என் எண்ணம், சிந்தனை, செயல் ஆகிய அனைத்திலும் ஜிம் கார்பெட்டே வியாபித்திருந்தது. என் காமிராவிற்கு லென்ஸ் கோட் என்னும் உறை, காமிராவிற்கு பீன் பேக் என அமர்க்களப்படுத்தினேன். போய் இறங்கும் போதே இருவரும் ஒரே மாதிரி உடை அணிய வேண்டும் என்று முடிவு செய்தோம் ஜீன்ஸ் பேண்ட், கருப்பு டி சர்ட் என முடிவு செய்து வாங்கினோம். அக்டோபர் 27ம் வந்தது. வாட்ஸ் அப், ஃபேஸ் புக் என்று அனைத்திலும் ஸ்டேட்டஸ் தட்டி விட்டேன். காமெண்ட்கள் எகிறின. ஏதோ ரஜினி, விஜய் படம் ரிலீஸ் ஆவது போல் ஏகப்பட்ட ஹைப்...அத்தனையும் கடந்து டில்லி சென்றடைந்தோம். அங்கிருந்து ஒரு வேன் மூலம் ஜிம் கார்பெட் செல்வதாக பிளான்.
      நாங்கள் காலை ஒன்பது மணிக்கு டில்லி சென்றடைந்து விட்டோம். பெங்களூரிலிருந்து சிலர் எட்டு மணிக்கெல்லாம் வந்து விட்டனர். இன்னும் சிலர் சென்னையிலிருந்து  வர வேண்டும் என்பதால் அவர்களுக்காக விமான நிலையத்தில் காத்திருந்தோம். காத்திருக்கும் வேளையில் எங்களுடன் பயணித்த குழுவைப் பற்றி சிறு அறிமுகம். அனைவரும் முப்பதுகளில் உள்ள இளைஞர்கள். பெண்கள் இருவர். கணவன் மனைவியாக இளம் தம்பதி இருவர்.குடும்ப சகிதம் சிறு குழந்தையடன் ஒருவர்.( மூன்றாம் வகுப்பு படிக்கும் அந்தப் பெண் குழந்தையின் பெயர் சுப்பு லஷிமி. அவளின் தாயின் பெயர் நைனா. நான் வெகு நேரம்வரை குழந்தையின் பெயர் நைனா, தாய் சுப்பு லஷிமி என நினைத்துக் கொண்டிருந்தேன்.) குழுவிலேயே நாங்கள் தான் வயதில் மூத்தவர்கள். ஆண்ட்டி, அங்கிள் என அனைவரும் பவ்யமாக மிகவும் மரியாதையுடன்  நடத்தினர். இந்நேரம்., நாங்கள் கிளம்பும் முன் ஃபேஸ் புக் மற்றும் வாட்ஸ் அப் இல் பகிர்ந்த புகைப்படங்களுக்கு நண்பர்கள் அனைவரும் இட்ட காமெண்ட்கள் நினைவுக்கு வந்தன.. newlyweds, honeymoon couples, ஜோடிப் புறாக்கள்,etc., ... எங்கள் நண்பர்கள் ஒரு extremeக்குப் போய் இப்படி கமெண்ட்ஸ் அளித்திருந்தனர். இங்கே இவர்கள் நாங்கள் ஏதோ முதியவர்கள் போல ட்ரீட் செய்தனர். What an irony! We are not that young!! At the same time, We are not that old ! 
             சில மணி நேர காத்திருப்பிற்குப் பின் வேன் வந்தது. அதற்குள் மதியம் ஆகிவிட்டபடியால் கர்நாடக பவன் சென்று மதிய உணவை முடித்துக்கொள்ள கொண்டு ஒரு வழியாக ஜிம் கார்பெட் நோக்கி புறப்பட்டோம். பயணமெங்கும் பாட்டுகள் பாடிக்கொண்டோ, வொர்ட் கேம் விளையாடிக்கொண்டோ அல்லது புதுமையான மாஃபியா கேம் ஒன்று விளையாடிக் கொண்டோ வந்தனர். அவ்வப்போது வித விதமான நொறுக்குத் தீனிகள் வலம் வரும். நாங்கள் இப்போது டில்லியைத் தாண்டி உத்தரப்பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். இந்தியாவின் மிகப் பெரிய மாநிலம், ஐந்து பிரதமர்களைத் தந்த மாநிலத்தின் கதி பரிதாபமாக இருந்தது. சீரான சாலைகள் இல்லை, சாலை விளக்குகள் இல்லை. மொரடாபாத் என்னும் ஊருக்கு அருகில் பீக்கானர்வாலா என்னும் மிகப்பெரிய ,அழகிய உணவகத்தில் டீ அருந்துவற்காக நிறுத்தினோம். அங்கு விதவிதமான பலகாரங்கள் இருந்தன. பொதுவாக வடக்கிந்திய பலகாரங்களைப் பெரிதும் விரும்பாத நான் முருகேஸ்வரியிடம் வேண்டியதை வாங்கிக் கொள்ளும் படி கூறினேன். ஆனால் அவளோ வரும் நாட்களில் அளவில்லாமல் சாப்பிடப் போவதால் ஒன்றும் வேண்டாம் என்று கூறிவிட்டாள். அன்று தான் முதல் முதலாக பானி பூரியை சுவைத்தேன். அதன் இனிப்பும் புளிப்புமான சுவை எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. நமக்கெல்லாம் சமோசா தான் சரிப்பட்டு வரும்.
       இரவு தான் ஜிம் கார்பெட் போய் சேர்ந்தோம். எங்களுக்காக உணவு எடுத்து வைத்திருந்தார்கள். நாங்கள் தங்கிய ஹோட்டலின் பெயர் கஜராஜ் trails. ராம்நகர்(இங்கிருந்து தான் அனைத்து சஃபாரிகளும் கிளம்பும்) என்னும் ஊரிலிருந்து சுமார் அரை மணி நேர பயண தூரத்தில் இந்த ஹோட்டல் இருந்தது. இங்கு ஸ்விம்மிங் பூல், ஜிம், டேபிள் டென்னிஸ் என்று சகல வசதிகளும் இருந்தன. உணவும் சிறப்பாக இருந்தது. மூன்று வேளையும் சுவையான, சுகாதாரமான உணவு உண்டோம். அனைவரும் காலையில் ஐந்தரை மணிக்கே தயாராக வேண்டும் என்பதால், மற்றும் மிகவும் டயர்டாக இருந்ததால் ஓய்வெடுக்கத் தயாரானோம். மறு நாள் சஃபாரி  செல்வதால், இன்று சிறிது ஹோம் வொர்க் செய்யலாம் என கூகுள் துணையை நாடினேன்.(காட்டுக்குள்ளே இண்டர்நெட் ஆ? என்ற உங்களின் கேள்வி எனக்குக் கேட்கின்றது. ஜியோ (Jio) இருக்க பயமேன்? ) ஜிம் கார்பெட் எனபது இமயமலையின் சிவாலிக் ரேஞ்ச் ( ஏழாம் வகுப்பு புவியியல் பாடம் ஞாபகத்திற்கு வருகிறதா?) என்னும் மலையடிவாரத்தில் குமாயுன்( kumaon) காடுகளில் அமைந்துள்ளது. இதன் வனப்பகுதியை Dhikala zone, Bijrani zone, Jhirna zone, Durgadevi zone என பிரித்து வைத்துள்ளார்கள். ஜீப் சஃபாரி, யானை சஃபாரி, canter safari( இது குறிப்பிட்ட சில காலத்துக்கு மட்டுமே கிடைக்கும, நாங்கள் சென்ற போது இல்லை.) 
           அதிகாலையில் ஜீப் எங்கள் ஹோட்டலுக்கே வந்து விட்டது. மூன்று ஜீப்களில் , ஒவ்வொன்றிலும் ஆறு பேர் சகிதம் எங்கள் சஃபாரியைத் துவங்கினோம். நாங்கள் முதலில் சென்றது jhirna zone. நான் முதலில் கண்டு வியந்தது இந்தக் காடுகளைக் கண்டு தான். கபினி.. கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ளது. அதன் காடுகளை என் மனம் இந்தக்காடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அசந்து தான் போனது. அடர் வனம் என்பது இது தான். நெடிதுயரந்த மரங்கள். இடைவெளி இல்லாமல் நெருக்கமான விதவிதமான மரங்கள். சூரிய ஒளி உள்ளே ஊடுருவ முடியாத வண்ணம் இரு புறமும் ஓங்குதாங்கான மரங்கள், அவற்றின் இடையில் ஜீப் செல்வதற்கான மண் பாதை. இந்தப் பாதையில்பல இடங்களில் புலியின் காலடித்தடங்களைக் கண்டோம். சில நீரோடைகள் வழிகளில் இருந்தன. எனக்கு அவற்றின் பெயர்கள் தெரியவில்லை. விலங்குகள் அங்கு தண்ணீர் பருக வரும் வேளையில் காணலாம் என ஜீப் டிரைவர் கூறினார். புல்வெளிகளும் இருந்தன. புற்களின் உயரம் சுமாராக ஆறடி இருக்கும். அவற்றின் இடையில் விலங்குகளை ஊடுருவிக் காண்பது என்பது சற்று கடினமான காரியம் தான். ஆனால் விலங்குகளை இவ்வாறு வனச்சூழலில் காண்பது தானே திரில். அவற்றை கிட்டே நின்று ரசிக்க வேண்டும் என்றால் நாம் ஜூ (zoo)விற்கு அல்லவா செல்ல வேண்டும். பறவைகளின் சொர்க்கம் என்று இந்த zone ஐக் கூறலாம். நான் அறிந்த பறவைகள் தவிர புதிதாக பல பறவைகளையும் பார்த்தேன். அதன் பட்டியல் இதோ....Scarlet Minivet, Black hooded Oriole, White throated Kingfisher, Black Winged Kite, Scaly Breasted Munia, Red Vented Bulbul, Oriental Magpie Robin, White Browed Wagtail, House Sparrow, Blue Whistling Thrush, Asian Pied Starling, Himalayan Bulbul,Baya Weaver, River  Lapwing, Siberian Stonechat, Plum Headed Parakeet, Crested Goshawk. எந்த பறவையைக் கண்டாலும் ஜீப்பை நிறுத்தி புகைப்படம் எடுத்தேன். வாகனத்தில் இருந்த அனைவரும் இன்முகத்துடன் புகைப்படத்தைப் பார்த்து பறவைகளைப் பற்றிய விபரத்தை கேட்டு அறிந்து கொண்டனர். ஜீப்பில் வந்த naturalist தன்னுடைய செல் போனில் உடனுக்குடன் பறவையைப் பற்றி விவரத்தையும் பெயரையும் கூறினார். என்னுடைய பறவை மீதான ஆர்வத்தைப் பாரத்து, சார் நீங்கள் இரண்டு பேர் மட்டும் தனியாக வந்தால் இன்னும் அதிக பறவைகளைப் பொறுமையாகப் பார்க்கலாம் என்றார். குரங்குகள் பலவற்றைப் பார்த்தாலும் புது வகை ஒன்றை இங்கு தான் கண்டேன். Pigtail macaque... இதன் பின் புறம் பிங்க் நிறத்தில் இருந்தது. வால் குட்டையாக இருந்தது. நடந்து சென்ற இதன் பின்புறத்தை மட்டுமே என்னால் புகைப்படம் எடுக்க முடிந்தது. பொதுவாக குரங்குகள் பெர்ரி மரங்களின் மீதே அதிகம் காணப்பட்டன. அவற்றின் பழங்களை உண்டு அவை வாழ்கின்றன என அந்த naturalist கூறினார். மணி ஒன்பது ஆனதும் காட்டை விட்டு வெளியேறினோம். காலை உணவுக்குப் பின் ஓய்வு. இனி அடுத்த சஃபாரி மதியம் இரண்டு மணிக்கு. இம்முறை bijrani zone இல். மிக அடர்ந்த காட்டுப் பகுதியான இதில் புலிகளின் நடமாட்டம் அதிகமாம். புலிகளைப் பார்ப்போமா? எங்களுக்கு அந்த அதிர்ஷ்டம் கிட்டுமா? அனைவரும் மதிய சஃபாரிக்காக காத்திருந்தோம்..
               மதிய உணவை முடித்துக் கொண்டு ராம்நகர் சென்றோம். அங்கிருந்து bhijrani செல்ல வேண்டும். ஆளுக்கொரு பைனாக்குலர் கொண்டு காடுகளை ஊடுருவிப் பாரத்துக் கொண்டே வந்தோம். மான்களும், குரங்குகளும் மட்டுமே எங்களுக்கு காட்சி அளித்துக் கொண்டிருந்தன. புலிகளைக் காண முடியாது போலும் என மனம் சலித்த வேளையில், டிரைவர் படக்கென வண்டியை நிறுத்தி, ' அதோ பாருங்கள்..புலி' என்று கை காட்டினார். அனைவரும் ஆவலுடன் பாரத்தோம். சிறிது தொலைவில் ஆற்றங்கரையிலிருந்து புலி ஒன்று சரேலென காடுகளில் சென்று மறைந்தது. தகதக்க்கும் மஞ்சள் வண்ண மேனியுடன் அது ஒய்யாரமாக நடந்து அடர்ந்த புதர்களுக்குள் சென்றது. எனது காமிராவில் continuous shot போட்டு விடாமல் சுட்டுத் தள்ளினேன். அது இருந்ததோ சுமார் இருநூறு மீட்டர் தூரத்தில். அவ்வளவு தூரத்தை ஆறு கிலோ எடை கொண்ட காமிராவில் நொடியில் ஃபோகஸ் செய்து படம் பிடிப்பது ஒன்றும் எளிதான காரியம் அல்ல. ஆனாலும் புலியைக் கண்டு விட்ட சந்தோசத்தில் அது மிகவும் இலகுவாக வந்தது. மீண்டும் புலி கண்ணில் படுமா என்று சுற்றி சுற்றி வந்தோம். ஆனால் நாங்கள் மீண்டும் அதனைப் பார்க்கவில்லை. மாலை ஆறு மணிக்குள் வனத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் என்பதால் வெளியேறினோம். டீ குடிப்பதற்கு அங்கிருந்த 'ஷில்பா ரெஸ்டாரண்ட்' இல் அமரந்து கொண்டு மூன்று ஜீப்களில் பயணம் செய்த அனைவரும் அவரவர் அனுபவங்களை, புகைப்படங்களை ஒருவருக்கொருவர் காட்டி அளவளாவிக் கொண்டிருந்தோம். ரெஸ்டாரண்ட் இன் டேபிள் காமிரா, பைனகுலர் மற்றும் பிஸ்கட் களினால் நிறைந்து வழிந்தது. மனமும் புலியைக் கண்ட சந்தோசத்தினால் நிரம்பி வழிந்தது. அறைக்குத் திரும்பினோம். கேம்ப் ஃபயர் போட்டு அனைவரும் புல்வெளியில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். மறு நாள் ஞாயிற்றுக்கிழமை ஆதலால் நைனிடால் செல்வது என முடிவு செய்தோம்.
                    நைனிடால் எனும் மலைவாசஸ்தலம் ...நகர இயந்திர வாழ்க்கையினால் பாதிக்கப்படாமல் இன்னும் இயற்கை அழகு பாதுகாக்கப்படுகின்றது. நகருக்கு மூன்று கிலோ மீட்டர் தொலைவிலேயே பஸ், வேன் போன்ற பெரு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. ஊருக்குள் செல்ல சிறிய வாடகை உந்துகள்( taxi) கிடைக்கின்றன. குன்றுகளுக்கே உரித்தான மேடும், பள்ளமுமான குறுகிய சாலைகள், ஆர்ப்பாட்டமான மேற்கத்திய பாணியிலான உணவு விடுதிகள் இன்றி தெருவோர, மற்றும் சுதேசி உணவு தயாரிக்கும் சின்னஞ்சிறு உணவு விடுதிகள், கேள்வி கேட்டால் கள்ளமில்லாமல் பதிலளிக்கும் உள்ளூர் வாசிகள், ஏமாற்றாமல் உள்ளபடியே சரியான விலையைப் பகரும் தெருவோர வியாபாரிகள் என நைனிடால் என்னை மிகவும் கவர்ந்தது. ஊரின் பிரதான attraction ஏரி தான். அதனைச் சுற்றி சுற்றுலாப்பயணிகளுக்கென குதிரை சவாரி, உணவு வண்டிகள், பலூன் சூட்டிங், பாஸ்கட் பால் கோர்ட் என கவனத்தைக் கவரும் பல இருந்தன. சுற்றிலும் பசுமை போர்த்திய மலைகள், நடுவே பளிங்கு போன்ற நீருடன் ஏரி. விசைப்படகுகள் இல்லாமல் துடுப்பு படகுகள் மட்டுமே இருந்தன. ஏரியில் weed எனும் புல்லுருவி எதுவும் இல்லை. நாங்கள் அதன் அழகில் சொக்கித்தான் போனோம். Rock climbing, parasailing, rope car போன்ற இளைஞர்கள் விரும்பும் adventure sports பல இருந்தன. ஆனால் நேரமின்மை காரணமாக எங்கள் குழு இவற்றிற்குச் செல்லவில்லை. இங்கு ஹிந்தி தான் பேச்சு மொழி என்பதால் எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியில் பலரிடமும் கேள்வி கேட்ட வண்ணம் இருந்தேன்.( படகுக்காரர், உணவு விடுதி உரிமையாளர், குல்லா விற்பவர், maggi விற்பவர்) இது போன்ற எளிய மக்களிடம் பேசினால் மனம் நிறைவடைகிறது. மாலை நான்கு மணியளவில் நைனிடாலுக்கு பை..பை சொல்லி விட்டு கஜராஜுக்கு கிளம்பினோம். இன்னும் ஒரு நாள்சஃபாரி இருக்கின்றது.
              கடைசி நாள் இரண்டு சஃபாரிகளுமே bijrani zone இல் தான் என்றார்கள். இது தவிர trekking by Kosi riverside என்றார்கள்.( அந்த அனுபவத்தை தனியாகப்பார்க்கலாம்). அதிகாலையில் புற்களின் மீது பனித்துளிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாய் இருந்தது. மான்கள், குரங்குகள், என்று இன்றும் தொடர்ந்தது. சாலையில் கிங் கோப்ரா எனும் மிகப்பெரிய மலைப்பாம்பு ஊர்ந்து புதர்களில் மறைவதைக் கண்டோம் என்னால் அதன் வாலை மட்டுமே புகைப்படம் எடுக்க முடிந்தது. மாலையில் யானைக் கூட்டம் ஒன்றைக் கண்டோம். குட்டியானை இரண்டு , பெரிய யானைகள் ஐந்து என அவை கூட்டமாக ஆற்றில் நடந்து, தண்ணீரில் விளையாடிய வண்ணம் கடந்து கொண்டிருந்தன. நாங்கள் ஜீப்பை ஆஃப் செய்து விட்டு வெகு நேரம் அவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். உற்சாக மிகுதியால் கத்தினவா அல்லது சண்டையிட்டுக் கொண்டிருந்தனவா எனத் தெரியவில்லை. ஆனால் பிளிறிக் கொண்டே இருந்தன. சூரியன் மெல்ல மறைந்து கொண்டிருந்தது. நாங்கள் திரும்ப வேண்டிய நேரமும் வந்தது. யானைகளைக் கண்ட சந்தோசத்துடன் அனைவரும் ஷில்பா ரெஸ்டாரண்ட்க்குத் திரும்பினோம். சிறிது அளவளாவி பின் மறு நாள் காலை உணவுக்குப் பின் டில்லிக்கு கிளம்புவது என முடிவு செய்தோம். 
          ஜிம் கார்பெட் அனுபவம் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது என்றவுடன் மனம் கலங்கியது. நான்கு நாட்களாக சென்று வந்த அதே பாதை, உண்டு வந்த அதே உணவகம், உறவினர் போல் அன்பு பாராட்டிய புதிய நண்பர்கள், சீராக வேனை செலுத்திய டிரைவர் போன்றவற்றிற்காக மனம் ஏங்கியது. ஆனால் கடமை அழைப்பது நினைவுக்கு வர மனம் சமாதானம் அடைந்தது. டில்லி நோக்கி பயணிக்கலானோம். உத்தர்காண்ட் சிறிய மாநிலமென்றாலும் அழகாக இருந்தது, சாலைகள் பழுதின்றி அமைந்திருந்தன. விவசாயம் சிறந்த மாநிலமாக இருந்தது. நதிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. பல தொழிற்சாலைகள் அங்கு அமைந்திருந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டேன். அதனைத் தாண்டி உத்தரப்பிரதேசத்தை அடைந்தவுடன் வித்தியாசத்தைக் கண்கூடாக்க் கண்டேன். அங்கு எதிலும் செழிப்பில்லை. முன்னேற்றம் என்ற சொல் வெகு தொலைவில் இருந்தது. காற்று மிகவும் மாசு பட்டு இருந்தத்தால் எங்கும் புகை மூட்டமாக இருந்தது. பஸ், கார் போன்றவற்றில் பயணிப்பதை விட இங்குள்ளவர்களுக்கு டிராக்டரில் நின்று கொண்டே பயணிப்பது தான் மிகவும் பிடிக்கும் போலிருக்கிறது. பலர் கூட்டம் கூட்டமாய் இப்படி பயணம் செய்து கொண்டிருந்தனர். வழி நெடுக ரோட்டோரங்களில் பிரம்பினால் செய்த நாற்காலி மற்றும், கூடைகள் விற்பனை செய்யும் கடைகள். ஜன்னலோரத்தில் அமர்ந்து இப்படி வேடிக்கை பாரத்துக் கொண்டே வந்தேன். மாலையில் பெரும் டிராபிக்கில் நீந்தி டில்லி விமான நிலையம் வந்தடைந்தோம். ஒன்பது மணிக்கு ஃபிளைட்... அருணா மெசேஜ் அனுப்பி இருந்தாள்,' Daddy..it's raining heavily here' என்று. மனம் புலி, யானை, மான், சஃபாரி என்பனவற்றிலிருந்து மீண்டு நிகழ் உலகுக்குத் திரும்பியது. பறக்க ஆரம்பித்தோம்...
       - அ. ரவி.

இந்த அனுபவத்தில் என்னால் இரு சம்பவங்களை நினைத்தால் சிரிக்காமல் இருக்க முடியாது. நான் புதிய காமிரா வாங்கிய உடன் என்னுடைய பழைய காமிரா வேலையின்றி சும்மா தான் இருந்தது. ஊருக்குப் புறப்படும் முருகேஸ்வரியிடம் அதனை பயன்படுத்துமாறு கூறினேன். அவளும் சிரமேற்கொண்டு அனைத்து சஃபாரிகளுக்கு அதை எடுத்துக்கொண்டு வருவாள். ஆனால் ஒரு முறை கூட அதைப் பயன்படுத்தி நான் பார்க்க வில்லை. ஒரு முறை மான்கள் நின்று கொண்டிருப்பதை நான் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தேன். அவளிடம் மான்கள் நின்று கொண்டு தான் இருக்கின்றன. அவற்றை புகைப்படம் எடுக்கலாமே என்றேன். அவளும் ம் கொட்டியவாறு ஸ்லோ மோஷனில் காமிராவை வெளியே எடுத்து ஃபோகஸ் செய்ய ஆரம்பித்தாள். அதற்குள் மான்கள் ஓடிவிட்டன. அடுத்த முறை எடுக்கிறேன் என்று கூறி காமிராவை திரும்பி உள்ளே வைத்து விட்டாள். நீ தயாராகும் வரை மான்கள் உனக்கு pose கொடுத்துக் கொண்டு நிற்குமா? என நான் கிண்டல் செய்தேன்.
மற்றொன்று....என் அருகிலிருந்த யூசுப் என்ற இளைஞன் சஃபாரி செல்லும் வேளையில் பாதி நேரம் தூங்கிக் கொண்டிருந்தான். நாங்கள் அனைவரும் விலங்குகளைத் தேடிக் கொண்டிருக்கும் வேளையில் அவன் உறங்கிக் கொண்டிருப்பான். நாங்கள் ஏதாவது ஒன்றைப் பார்த்து உற்சாக மிகுதியில் கத்தும் போது விழிப்பான். அவன் பாரப்பதற்குள் அது ஓடி ஒளிந்து விடும். ஆனால் அதற்கெல்லாம் அசரவில்லை. விட்ட தூக்கத்தைத் தொடர்ந்தான். ஆனால் நல்ல பையன். உதவும் குணம் மிக்கவன், நானோ முருகேஸ்வரியோ ஏதாவது தூக்கிக் கொண்டு வந்தால், உடனே வந்து வாங்கிக்கொண்டு உதவினான். அவன் மனைவி அலிஃபியாவும் enthusiastic பெண். டூரிலேயே மிகவும் கலகலப்பானவள் அவள் தான். Very nice couple.

Monday, January 30, 2017

Visiting Agra had always been in our bucket list. Aruna was specific about visiting The Taj Mahal this time and we planned for a short holiday to Delhi and Agra during the Pongal holidays.
Our speculations about the Taj were soaring high. On the day of our departure, the climate was unusually foggy, which made us wait in the airport for long hours.
Delhi airport ,with all its luxury amenities, was a big surprise for me. The Buddhist design in copper demanded my attention and without fail I took photos in front in front of them. I was astonished at the very big array of shops and lounges, a sight equivalent to International Airports.
People with turbans( I heard punjabis form thirty percent of the population), rickshaws, street vendors, lush greenery, buildings we learnt about in schools and news were coming alive and that was interesting. The weather was cold and people were seen either in blazers or sweaters, and shoes and that made them look more handsome. In nights, people ere warming themselves in fire, which would have an odd sight back in Chennai. We passed the towering Hanuman statue overlooking the metro and luckily we had no trouble of the much hyped Delhi traffic.
My husband suggested we go for shopping to Connaught place. The Connaught place seems to be one of the liveliest places in the capital city. The shops range from international brands to roadside shops. It seemed to be shopper's hub, people  of all ages, background- from executives to foreign tourists to college students; all thronged the place. I may say the places showcased the fast paced and frenzied lifestyle and vibrancy of the city. The pavements were lined up with small vendors and the contradiction of the big and small doing side by side made me smile. However as an eyesore I could see places ,especially corners ,with paan stains.
All of a sudden outside a restaurant a few people gathered and sang and danced. When it started crowding, they just parted and moved away. One more peculiar sight was outside a restaurant there was one guy banging a big drum to invite people to dine in that particular restaurant.
Attracted by the gigantic circular ivory white structures and beauty of the pillars, I quickly googled about the place. Designed to resemble two concentric circles, much of the Connaught places features Georgian architecture, named after Duke of Connaught, the third son of Queen Victoria. It has been recently renovated during the Common Wealth Games,in 2010. It has a Central Park, which has huge National Flag. We could see that still in the evening. Unlike other flags , it was not lowered at sunset. I remembered the flag in War Memorial in Beach Road, Chennai. Hailing from a metropolitan city, I could always connect the places in New Delhi with places from where I am from, Chennai.
It also had underground market called Palika bazaar. They said you can get everything from a DSLR camera to laptop at a cheaper price. Out of eagerness, I stepped into it. The very first shop had shirts and I asked for the price. The salesman(or was he the owner?) said it was 950. I started walking back since the shirt wasn't that worth. At once, he came down to 400.  Utterly shocked I returned never turning back, since I have zero talent in bargaining.
The next day we headed towards ,the much awaited, Agra in Bhopal Shatabdi Express.  We had plans to take pictures in Agra in trendy modern outfits, but had to change to dull boring sweaters, jackets and mufflers and the weather had to be blamed for it. The Taj is not visible in the entrance. You have to walk through a distance to reach the ticket booth. From there while heading towards it you can entrance arch like structure in red stone. Once you near it you can see, the much hyped, view of the Wonderful Taj.
Spell bound, Awestruck, Dumbstruck ... these are the few words that came into my mind, when I first saw the Taj.Much has been written and told about it's exquisite architectural structures, so let me not go into such elaborate details. The love story that the Taj Mahal unfolds moves one to tears and churns so many memories. The mammoth structure is flanked by a two red stone identical structures, one a mosque, the other the guest house. These enhance the beauty of the ivory white Taj. Cleaning work was on progress in one of the minars. The river Yamuna was in a pathetic condition behind.
Elegance is one apt word to describe the Taj, to be precise, it was a beautiful poetry written in marble. Countless works of literature  have been penned on the beauty of the Taj. My husband seemed to be in race with poet, but in his own way , he took around 600 photos. Jokes apart, we were roaming round and round around the the Taj wishing to devour every single minute detail of the nuances of the epitome of Love. We took the cliche picture of touching the Taj dome and that was our means to catch the beauty of Taj in its fullest form. My husband and Aruna were trying to succumb all its beauty with their camera lenses. three hours had gone, still we had  no idea to leave the Taj, but there is an irony in life., when it comes for a battle between the stomach and the brain, the latter always loses. It was one-o'clock and we had to answer our pinching stomachs.
Post lunch we visited the Agra fort, the place from where Shah Jahan watched the Taj in his final days. Though the Agra fort looked like tattered pieces, I have to admit that it was another incredible piece of architecture built by the Mughals. The outer red sandstone Walls were built by Akbar, further few structures in red sandstone were built by Jegangir and the marble ones were built by Shah Jagan. The fort is impressive but unfortunately a large part of it cannot be seen as it in control of the army. We can see the Taj through one of the canopies there.
However, one thing made me sad about the city was piles of trash seen around the city.How a city like Agra, which has Unesco Heritage sites smelt like complete dump!
The country capital had lots and lots to offer, being political head quarters, hot seat of mainstream media channels, top most universities, top industries, pious shrines, shopping places, etc. Qutub Minar, Red Fort, Jamma Masjid and Raj ghat were the few places we were eager to see.
The Parliament, Rastrapathi Bhavan and the India Gate. We watched these places with great awe, but had to move quickly for security reasons. As bad luck would have it, Republic Day practice had begun and we were not able to see India Gate closely. I was very keen to visit it, since in most of the Hindi films, the heroes would begin their day by jogging there in hazy mist. But better luck next time, I am very sure I would visit Delhi again. The charm of the city is such that you will never feel content with one visit.
Brimming with patriotism, next we moved on to Indira Gandhi's memorial at Saftarjung road. Years back it was Prime Misnisters residence. Large amount of information through newspaper cuttings, exhibits of her personal belongings, letters to her children, her childhood photos and rare photos with world's greatest leaders were displayed. Adjacent to her memorial Rajiv Gandhi's exhibits too were displayed since he too lived in that place before becoming the Prime Minister, before her assasination. Tears rolled down my eyes when I saw Rajiv's shattered clothes and shoes, which helped to identify him. I was reminded of few incidents, which I read in newspapers as a teenager and anecdotes about her regime and my dad discussing about it to his friends. As far as Rajiv, I remember very well about each and incident and about how he was admired for his global influence and people went gaga over him being the youngest Prime Minister. These places are worth the visit, than the touristy sites.
I am not a history buff, but my personal interest in heritage and architecture often drew me towards historical sites and Qutub Minar was our next destination. Though the tower is visible from the entrance you walk through other monuments to reach it. In spite of being built by various Muslim rulers, we can see pillars with Hindu motifs. The incomplete Alai Minar is the profound demonstration of instability of life. Qutub Minar guarantees lots of beautiful clicks.
We moved on to Raj Ghat, Mahatma Gandhi's memorial, after lunch. It had a vast garden., in the center of the garden is a raised black marble slab, with an engraving of the phrase' Hey Ram', his last words. It was decorated with flowers and had an eternal flame burning in a large lantern in the middle. We paid our homage to The Father of the Nation. It was a peaceful place far away hustle bustle of Delhi life.
As the sun was setting , we set our foot into the Red Fort. I was very eager to see Red Fort because every year the Prime Minister addresses the Nation by hoisting the National Flag on Independence Day. As for itself, the Red Fort , displayed Mughal architecture at its best. It had been the residence of Mughal Emperors for two centuries. What else could talk about its flawlessness and grandeur. Though the iconic symbol of Indian history worth the visit, the audio video arranged by the government proved to be a disaster. Never ever go for it.
To roll it down, let me say a few words about Delhi. Delhi's greenery almost made me envy it. Coming from a sun scorched city , the weather and the lush gardens, and the care they take to maintain them were very impressive and the weather was pleasing. However my husband was constantly replying that in summer you couldn't stand there. Delhi is a combination of the modern and contemporary life. Old Delhi boasts of old world charm with its magnificient buildings.,while New Delhi comprises with hi- tech edifices and up market destinations. Lined up with renowned buildings of all government head quarters, residences of former and current ministers,memorials of various leaders, their statues, roads named after them, it proves to be an unending zest. Many warned me about being ripped off in Delhi and in spite of being cautious, we had a bitter experience with an autowalah,but it's all a learning experience and let me forget it.
I read that Delhi is gastromer's paradise, but couldn't experiment that. With two South Indian food lovers( Aruna and my husband) we ate lunch in Udipi Lunch home and Saravana Bhavan. Personally I feel Delhi is inspiring and fascinating city. The next day we returned home loaded fully of sweet memories.
PS: Do read my blog in Tamil...டில்லி அனுபவங்கள்.



டில்லி அனுபவங்கள்..

      விஜய் டிவியில் ' சூப்பர் சிங்கர்' என்று ஒரு நிகழ்ச்சி போடுவார்கள். பாரத்திருக்கிறீர்களா? அந்த நிகழ்ச்சியை விட அது முடிந்த பின் புளூப்பர்ஸ்(bloopers) என்று ஒன்று போடுவார்கள். அது தான் ரொம்ப ரசிக்கும்படி இருக்கும். அது போல நாங்கள் டில்லி மற்றும் ஆக்ரா சென்று வந்த கதையை ரொம்பவும் dignified, decent, diligent( இன்னும் என்னென்ன d words இருக்கோ..சேர்த்துக் கொள்ளுங்கள்) ஆக முந்தைய பிளாக்கில் சொல்லி இருந்தாலும், இதில் உண்மையைப் போட்டு உடைக்கப் போகிறேன். என்னென்ன முட்டாள்தனம், கோணங்கித்தனம் பண்ணினோம்னு இப்போது வெளிவரும். (சிரிப்புக்கு நான் கியாரண்டி.)

         ஊருக்குப் போகலாம் என்று முடிவெடுத்த பின் தினமும் வீட்டில் அதைப் பற்றி தான் பேச்சு. ஆளாளுக்கு டில்லியில் அங்கே போகனும் இங்கே போகணும் என்று லிஸ்ட் அடுக்கிக் கொண்டே போனோம். நிற்க.. ட்ரிப் மொத்தமே மூன்று நாட்கள் தான். அதில் ஒரு நாள் ஆக்ராவுக்கு. பின் மீதமிருக்கும் நாட்களுக்குத்தான் இத்தனை களேபரம். இந்த கூகுள் அக்கா வேறு சும்மா இருக்க மாட்டார்கள். டில்லி என்று டைப் செய்தவுடன் எகிடுதிடாக பல இடங்களையும் ஷாப்பிங் செல்ல வேண்டிய இடங்களையும் அடுக்கிக் கொண்டே போனது. வீட்டில் செய்யும் அலப்பறை போதாதென்று ஷாப்பிங் சென்று வேறு லூட்டி அடித்தோம். ஊரெல்லாம் ' sale'  போட்டிருக்கிறான் என்று மக்கள் துணிமணிகளை அள்ளிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் ஸடைலாகப் போய் சேல்ஸ் நபரிடம் ' winter clothes' பற்றி விசாரித்தோம். அவர் எங்களை ஏற இறங்க பார்த்து விட்டு,' அதெல்லாம் இல்லீங்க' என்றார். ஆனால் நாங்கள் ' விடாது கருப்பு' என்பது போல் பெருமுயற்சி செய்து பிளேசர், ஸ்வெட்டர், க்ளவ்ஸ், ஷூஸ் என்று ஒரு பெரிய பை நிறைய சாமான் சேர்த்து விட்டோம். நான் சும்மாவாச்சும் கிண்டல் செய்கிறேன் என்றாலும் அங்கு அதீத குளிரின் காரணமாக இவை பெரிதும் உபயோகமாய் இருந்தன. இவை இல்லாமல் இருந்திருந்தால் மிகவும் சிரமமாய் இருந்திருக்கும்.

          ஏர்ப்போர்ட் கிளம்பும் போது ஒரே புகை மண்டலம். காரில் போகும் போது,' போகி... அதனால் தான் இப்படி இருக்கு' என்று பேசிக் கொண்டிருந்தோம். ' இன்னைக்கு ஊருக்குப் போனாப்ல தான்... பிளைட் எவ்வளவு நேரம் டிலே ஆகப் போகுதோ?' என்று அவர் கவலைப் பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அருணா அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள். இடியே விழுந்தாலும் அவளுடைய இயர்ஃபோனை எடுக்க மாட்டாள். சின்சியரா பாடம் படிக்கிறாளோ இல்லையோ சின்சியரா பாட்டு கேட்பாள்
         பிளைட் நாலு மணி நேரம் தாமதம். கொடுமையாக இருந்தது. எவ்வளவு நேரம் தான் ஏர்ப்போர்ட் லவுன்ஜ் ஐ சுற்றி வர்றது!!! மிகவும் போர் அடித்தது. அதற்குள் இரண்டு காபி இரண்டு சமோசா ஸ்வாகா பண்ணியாயிற்று.(ம்ம்...என்ன கேக்கறீங்க? டயட் என்னாச்சுன்னா? அதெல்லாம் காத்தோட பறந்துருச்சு... ) போர் அடித்தது. ஆனால் திடீர்னு ஒரு சர்ப்ரைஸ்..நடிகர் சூர்யா, ஜோதிகா மற்றும் அவரோட குழந்தைகள் கோயம்புத்தூர் போறதுக்காக வந்தாங்க.( பாவம் அவர் எவ்வளவு நேரமாக காத்திருந்தாரோ?) தமிழ்நாட்டின் கனவு ஜோடியைப் பார்த்த சந்தோசத்தில் நாங்கள் ஹேப்பி ஆகிவிட்டோம்.
           தாஜ் மஹால் பார்த்தோம். அப்படி ஒரு அழகு! டிவியில், புகைப்படங்களில், திரைப்படங்களில் பார்த்ததை விட கொள்ளை அழகு. வெள்ளை வெளேரென்று மனதைக் கவர்ந்து. தனுஷ் ஒரு படத்தில் பாடுவார்,' வெள்ளாவி வைச்சுத்தான் வெளுத்தாய்ங்களா? இல்ல வெயிலுக்குக் காட்டாம தான் வளத்தாய்ங்களா?' என்று. அது போல தான் எனக்கும் தோன்றியது. அதன் அழகில் சொக்கிப் போய் என்னவர் புகைப்படங்களாய் எடுத்துத் தள்ளினார். அருணா அவள் பங்கிற்கு புகைப்படங்கள் மற்றொரு பக்கம் போய் எடுத்தாள். ஆகவே முக்கால் வாசி படங்களுக்கு நான் தான் pose கொடுக்க வேண்டியிருந்தது. இப்படி நில்...அப்படி நில் என்று ரொம்ப நேரம் ஆகிவிட்டது. வெளியே வரும் போது கொஞ்சம் பறவைகள் மற்றும் குரங்குகள் திரிந்தன. அவற்றையும் ஓடி ஓடி புகைப்படம் எடுத்தார். ' இவற்றிடம் இப்படி நில், அப்படி நில் என்று சொன்னால் கேக்குமா? முடியுமா?' என்று எனக்குத் தோன்றியது. சிரித்துக் கொண்டேன்.' அவை என்ன முருகேஸ்வரியா?? சொல்வதையெல்லாம் கேட்பதற்கு!? ' என்று தோன்றியது. அருணாவிடம் சொன்னேன்.' ஜோக்கா?? சிரிச்சுட்டேன்..' என்று சொன்னாள். எனக்கு புஸ்.. என்று ஆகி விட்டது.
               இதே போல் தான் குதுப் மினாரில் நடந்த சம்பவமும். குதுப் மினாரின் வரலாறு கொஞ்சம் சிக்கலானது. Slave Dynasty இன் குதுப்-தின- ஐபக், இல்துமிஷ் போன்ற மன்னர்களைப் பற்றியெல்லாம் அருணாவுக்குத் தெரியவில்லை. என்னுடைய கட்டுக்கடங்காத ஆர்வம்( கரை புரண்டு வருவதை பாவம் தடை போடுவதற்குள் இருவருக்கும் போதும் போதும் என்று ஆகி விட்டது) அங்கு வீடியோ ஷோ என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றது. என்னைத் தவிர அங்கே சீந்துவாரில்லை. ஆளே இல்லாத கடையில் யாருக்குடா டீ ஆத்துறீங்க? என்கிறாற் போல அங்கு ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். எழுப்பிக் கேட்டவுடன் ' விடக் கூடாது இந்த பலி ஆடுகளை' என்கிறாற் போல என்னைப் பரிதாபமாக ஒரு பார்வை பார்த்து விட்டு எத்தனை பேர் என்று ஆர்வம் பொங்க கேட்டார். நான் மூன்று பேர் என்றவுடன் அவருக்கு சப்பென்று ஆகிவிட்டது. சரி என்று என்று டிவியை ஆன் செய்து பென் டிரைவை சொருகினார். சுமார் பத்து நிமிடங்கள் குதுப் மினாரின் வரலாற்றுப் பெருமைகளை அது பேசியது. எனக்கு மிகவும் பிடித்திருந்து. வெளியே வந்தவுடன்,' புரிந்ததா?' என இருவரிடமும் கேட்டேன். அவர்,' உனக்கு புரிஞ்சதுல்ல...அப்போ எங்களுக்கும் புரிஞ்ச மாதிரி தான்' என்றார். அங்கும் இருவரும் புகைப்படம் எடுப்பதில் தான் ஆர்வம் காட்டினர். நான் இது கதைக்கு உதவாது என்று புரிந்து கொண்டு தனியாகவே சுற்றிப் பார்த்தேன். 
               எந்த ஊருக்குப் போனாலும் என்னவர் ஸ்பூன், ஃபோர்க் வைத்து சாப்பிடுவது எப்படி என்று எனக்கு பாடம் நடத்த ஆரம்பித்து விடுவார். ஆனால் நான் அதற்கெல்லாம் அசாராமல் சாப்பாட்டில் புகுந்து விளையாடுவேன். இம்முறையும் அப்படித்தான் ஆலூ பராத்தாவையும், பான் கேக் ஐயும் ஃபோர்க், நைஃப் இனால் சாப்பிட்ட முதல் ஆள் நானாகத்தான் இருக்கும். அது என்னவோ தெரியவில்லை...மெனு கார்டை கொண்டு வந்து நீட்டினால் அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது என்பது எனக்கு கடினமாக இருக்கும். ஆனால் அதே மெனுவை பஃப்ஏ(buffet) ஆக பரப்பி வைத்தால் ஒன்று பாக்கி இல்லாமல் அனைத்தையும் ருசித்துப் பாரத்து விடுவேன். 
          சுற்றுலா செல்வதற்கு முன் கூகுள் செய்வது என் வழக்கம் என்று முன்பே சொன்னேன் அல்லவா! சென்ற வருடம் லோனாவாலாவுக்கு சென்ற போது அங்கு ' சிக்கி' மிகவும் பிரபலம் என்று கேள்விப்பட்டேன். உடனே அது வேண்டும் வேண்டும் என்று கேட்டு அடம் பிடித்து வாங்கினேன். அது ஒன்றுமில்லை.. நம்ம ஊரு கடலை மிட்டாய் தான். ஆனால் ருசியில் நம் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு அருகில் கூட வர முடியாது. சிக்கி யை நான் கீழே தான் போட்டேன். இம்முறையும் ஆக்ராவில் 'பேடா' ரொம்ப பிரபலம் என்று கூகுள் தெரிவித்து விட்டது. அது போலவே ஆக்ராவில் தெருவுக்கு தெரு கடை விரித்து பேடாவை பரப்பி இருந்தார்கள். ஆனால் சிக்கி அனுபவத்தால் பேடாவை கவனமாக தவிர்த்து வந்தேன். ' முயற்சி செய்து தான் பாரேன்!' என்று மனம் ஏனோ சொல்லிக் கொண்டே இருந்தது. ஆனால் புத்தி,' வேண்டாம்..முருகேஸ்வரி! எல்லோரும் போன தடவை மாதிரி கிண்டல் செய்வார்கள். ரிஸ்க் பா!' என்று கண்டிப்பாக கூறிவிட்டது.
          என் அறிவுத் தாகத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியும் தானே! நான் மீண்டும் ஒரு முறை அதனைப் பயன்படுத்தி அவர், மற்றும் அருணாவிடம் மாட்டிக் கொண்டேன். டில்லியில் Red Fort இல் ஆடியோ வீடியோ ஷோவிற்கு பந்தாவாக டிக்கெட் வாங்கிக்கொண்டு நுழைந்து விட்டோம். நுழைவாயிலில் தான் தெரிந்தது.. முதல் ஒரு மணி நேரம் ஹிந்தியிலும் அதன் பிறகு ஆங்கிலத்திலுமாம் என்று. நான் தெரியாமல் ஹிந்திக்கு டிக்கெட் வாங்கிவிட்டேன். அவர்கள் இருவருக்கும் ஹிந்தி தெரியாது. என்னை முறைத்தார்கள். நன்றாகப் புரியும் நான் இருக்கிறேன் என்று சமாளித்து உள்ளே அழைத்துச் சென்றேன். ஷோ ஆரம்பித்தது. கொடுமை அது. ரொம்ப போர். நம் அரசின் சுற்றுலாத்துறை இன்னும் 1950 இலேயே இருக்கிறதோ என்று எனக்கு சந்தேகம் தோன்றியது. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக்கி இருக்கலாம். பாவம் தெரியாமல் மாட்டிக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நெளிந்தனர். குழந்தைகள் அழ ஆரம்பித்துவிட்டனர்.( அவர்களால் அப்படி செய்ய முடியும்..நம்மால் முடியாதே!!) வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் சிலர் வெளியேறினார்கள் .அவர்களுடன் நாங்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என,று வெளியே ஓடி வந்து விட்டோம். அந்தக் கோட்டையின் அழகையும் கம்பீரத்தையும் குலைப்பதற்கென்றே இதை ஏற்பாடு செய்திருப்பார்கள் போல!
        Delhi Dhaba என்று சென்னையெங்கும் கடை விரித்திருப்பார்கள்.அதனால் டில்லியில் என்ன கிடைக்கும்? அதை உண்ண வேண்டும் என்று பெரும் ஆவலோடு இருந்தேன்.ஆனால் என்னவருக்கு டில்லி வந்ததும், சரவணபவன் மீது காதல் வந்து விட்டது. நாளைக்கு சரவண பவனில் லன்ச் சாப்பிட வேண்டும் என்று முந்தைய நாள் இரவிலிருந்தே சொல்ல ஆரம்பித்து விட்டார். சமார் பத்து முறை சொல்லி இருப்பார்( எண்ணாமல் விட்டு விட்டேன். எண்ணியிருந்திருக்கலாம்). எனக்கு துளி கூட விருப்பம் இல்லை என்றாலும் வாயை மூடிக்கொண்டேன். அங்கே போய் அவர் மற்றும் அருணா மீல்ஸ் மற்றும் தோசை என்று வெளுத்துக் கட்டினார்கள். விதியை நொந்தபடி ஆனியன் ஊத்தப்பத்தை கடனே என்று மென்று தின்னேன். என்னுடைய கனவு( பட்டர் சிக்கன் ,பட்டர் நான்) தகர்ந்தது. சரி, வெந்த புண்ணிற்கு மயிலறகால் மருந்திடலாம் என்று எண்ணி நொந்த வயிற்றிற்காக ஃபில்டர் காபி ஆர்டர் செய்தேன். ஆனால் சரவண பவன் காரர்கள் என்னைப் பழி வாங்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தாற் போல மிக மட்டமான ஒரு காபியை வந்து நீட்டினர். விதியை நொந்தபடி விழுங்கித் தொலைத்தேன். வெளியே வரும் போது அருணா, மற்றும் அவர், இருவர் முகமும் பிரகாசமாக இருந்தது. ' அப்பா... சாப்பாடு நல்லா இருந்துச்சுல்ல...' அருணா அவரிடம் கூறினாள். (இருடி.. உன்னை வைச்சுக்கிறேன் என்றேன் நான் மனதிற்குள் மௌனமாக). அவர்' சரவண பவன் ..சரவண பவன்  தான்.. இல்ல?' என்று என்னிடம் புன்னகைத்த படி கேட்டார். நான் சிரித்துக் கொண்டேன். நம்ம துன்பத்தை பிறரது இன்பத்தில் மறந்துரணும்னு எங்கம்மா எனக்கு சொல்லி இருக்காங்க!
             டில்லியில் நான் ரசித்த சிலவற்றைப் பற்றி சொல்ல வேண்டும். டில்லியில் இன்னும் ரிக்ஷாக்கள் உலவுகின்றன. சென்னையில் அவற்றைக் காண்பது அபூர்வம். இன்னும் ஒரு வித்தியாசமான வாகனத்தையும் கண்டேன். அதன் புகைப்படத்தை இணைத்துள்ளேன். இது தவிர குதிரை வண்டியில் காய்கறி விற்ற விநோதத்தையும் பார்த்தேன். டில்லியின் பசுமை கண்ணைக் கவர்ந்தது. அன்னை இந்திராவின் நினைவிடத்திற்கும், மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கும் சென்றோம். மனம் கனத்தது. கண்களில் கண்ணீருடன் அந்த தியாகச் செம்மல்களுக்கு அஞ்சலி செலுத்தினோம்.
               விமான நிலையத்திற்கு செல்லும் சாலைகள் சிங்கப்பூரை ஒத்து இருந்தன. விமான நிலையத்தின் அழகில் சொக்கிப்போனேன். ஊருக்குத் திரும்ப மனமே வரவில்லை. இன்னும் கொஞ்ச நாட்கள் இரேன் என்று டில்லி கூறுவது போன்ற ஒரு பிரம்மை தோன்றியது. திரும்பவும் வர வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டு சென்னை திரும்பினேன்.
பின் குறிப்பு: சுவாரசியத்திற்கு என்னுடைய Impressions on Delhi, Agra பிளாக் வாசிக்கவும்.






Monday, January 9, 2017

கனவல்லவே!!!

தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தான் வேணு. கூரையில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தான். இவற்றை எண்ணுவதை விட மொட்டை மாடியில் போய் நிஜத்தில் நட்சத்திரங்களை ரசிக்கலாமே என்று தோன்றியது. கட்டிலை விட்டு எழுந்து மொட்டை மாடிக்குச் சென்றான்.
     அழகிய நிலா ஒளி வீசிக் கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் நூற்றுக்கணக்கில் மின்னிக் கொண்டிருந்தன. எங்கும் நிசப்தம். அங்கே ஒரு விநோதமான அமைதி நிலவுவது போல் அவனுக்குத் தோன்றியது. சிறிது அச்சமாக இருந்தது. அதையும் மீறி ஒரு அனுமாஷ்ய அமைதியை அவனால் உணர முடிந்தது. 
       சாய்ந்தவாறு ரசித்துக் கொண்டிருந்த போது திடீரென்று  மின்னல் வேகத்தில் சிறிய உருவம் கண் முன்னே மின்னிச் சென்றது. ஆர்வத்துடன் அதனையே கவனித்துக் கொண்டிருந்தான். அது சரேலென இறங்கி அவன் வீட்டின் அருகிலிருந்த காலி பிளாட்டில் போய் விழுந்தது. போதிய வெளிச்சம் இல்லாததால் அதற்கு என்றாயிற்று என்று அங்கிருந்து தெரியவில்லை. 
      அது என்ன என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் உந்தித்தள்ள வீட்டிற்குள் சென்று ஒரு டார்ச்சை எடுத்துக் கொண்டு அதைத் தேடிச் சென்றான். தூரத்தில் எறிந்து கொண்டிருந்த தெரு விளக்கின் ஒளி போதுமானதாக இருந்தாலும் டார்ச்சின் துணையுடன் நன்றாகப் பார்க்கலாம் என்று எண்ணிய படியே செடிகளை விலக்கியவாறே நடந்தான். 
        ஒரு புதரின் அருகில் மினுக் மினுக் என்று எரிந்து கொண்டிருந்த விளக்குகளுடன் சிறிய கூம்பலான கூடை போன்ற வடிவத்தில் ஒரு விநோதப் பொருள் கிடந்தது. அதன் அருகே மிகச்சிறிய உருவம் ஒன்று அடிபட்டுக் கிடந்தது.
         இறகுகள் கொண்ட அந்த உருவம் பறவை போலில்லை. தலையின் மீது இரு ஆண்ட்டெனாக்கள் இருந்தன. கைகள் மற்றும் கால்கள் உடைய புது வகையான விலங்கு போலிருந்தது. அதன் கண்கள் உருண்டையாகவும் காதுகள் நீண்டும் இருந்தன. அதன் முகத்தின் பாவனையிலிருந்து அது ஏதோ துன்பத்தில் இருப்பது போலிருந்தது. 
         வேணு மெல்ல அதன் அருகில் சென்றான். அதன் இறகுகளில் ஒன்று சிறிய விரிசலுடன் காயம் பட்டாற் போலிருந்தது. அதனைக் கைகளில் தூக்கினான். வலியில் ஏதோ முனகியது. பிய்ந்த இறகுகளை சரி செய்தால் அதற்கு உதவியாய் இருக்கும் என்று நினைத்தான்.
          பள்ளியில் எப்பவோ படித்த முதலுதவியும், தன் வீட்டில் முதலுதவிப் பெட்டி இருப்பதும் நினைவிற்கு வந்தது. வீட்டிற்கு ஓடிச்சென்று அதனை எடுத்து வந்தான். எதற்கும் உதவுமே என்றுஒரு தீப்பெட்டி, மெழுகுவர்த்தி எடுத்துக் கொண்டான். அம்மா காயம் அனைத்திற்கும் மஞ்சளை அரைத்துக் கட்டுவது நினைவிற்கு வந்தது. அடுக்களையில் நுழைந்து அஞ்சறைப்பெட்டியில் இருந்த மஞ்சள் தூளையும் பழைய துணியையும் எடுத்துக் கொண்டு ஓடினான்.
          முதலில் கவிழ்ந்து கிடந்த அந்தப் பறக்கும் தட்டை நிமிர்த்தி வைத்தான். பின் அந்த விநோத உயிரை மடியில் வைத்து முதலுதவி செய்தான். பிய்ந்திருந்த இறகுகள் சூடு படுத்தப்பட்ட மெழுகினால் ஒட்ட ஒட்டிக் கொண்டது. என்ன ஆச்சர்யம் .. அது உடனே கண் விழித்துப் பார்த்தது. அதனிடம் துளியும் பயம் இல்லை. வேணுவிற்கும் அதனைத் தொட்டுத் தடவி மருத்துவம் செய்ய சிறிதும் தயக்கம் ஏற்படவில்லை. அவனைப் பாரத்தப் பார்வையில் அவனுக்கு அதனிடம் ஒரு இனம் புரியாத அன்பு ஏற்பட்டது. எல்லாம் ஒரு நிமிட நேரம் தான். கூடையில் ஏறி அமரந்து கதவுகளை மூடி பறந்து சென்று விட்டது.
         வேணு கண்மூடி முழிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டதை உணர்ந்தான். அதன் வேகம் பிரமிப்பூட்டுவதாக இருந்தது. வானில் பறந்து மறைந்து விட்டது. சிறிது நேரம் அப்படியே நின்று கொண்டிருந்த வேணு நினைவிற்கு வந்தவனாய் வீடு திரும்பினான்.
          மனம் எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்த போது தொலைக்காட்சியை போட்டான். செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது. பெண்மணி ஒருவர் செய்திகள் வாசித்துக் கொண்டிருந்தார்." பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ' வேற்றுக் கிரக வாசிகள் பூமிக்கு வருவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகம் என்று தான் 2010 இல் எழுப்பிய சந்தேகம் இன்னும் நீடிக்கின்றது' என்று கூறினார்."
          வேணு தொலைக்காட்சியை அணைத்து விட்டு தூங்கப்போனான். நாளை பள்ளியில் போய் தன் நண்பர்களிடம் சொன்னால் அவனுடைய நண்பர்கள் யாரும் நம்ப மாட்டார்கள் என்று அவனுக்குத் தெரியும். ஆனால் அறிவியல் ஆசிரியர் நம்பக் கூடும் என்று நினைத்துக் கொண்டான். ஆனாலும்  அவன் கண்டது உண்மைதானே! கனவல்லவே! என்று புன்னகைத்த படியே தூங்கிப் போனான்.

            

Sunday, January 8, 2017

பசுமைப் போர்வை.

"என்னங்க.. இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே. உங்கள் நண்பரைப் போய் பார்த்து விட்டு வரலாமே!" காபியை நீட்டியவாறு சுமதி கூறினாள். நாளிதழில் மூழ்கியிருந்த சுந்தரம்," ம்..ம்.." என்றவாறே காபியை வாங்கிக் கொண்டார். 
அவருடைய தோழர் ராமலிங்கத்தின் மகன் சமீபத்தில் தான் சாலை விபத்தில் அகால மரணமடைந்தான். 'இந்தக் காலப் பசங்க என்ன வேகமாப் போறாங்க.. அது சில சமயங்களில் அவர்கள் உயிரையே பறித்து விடுகிறதே' என்று எண்ணியவாறே எழுந்தார். " சரி, சுமதி நான் ஒரு பதினோரு மணி வாக்கில் அவனைப் போய் பாரத்து விட்டு வருகிறேன். அவன் சோகத்தை சுலபமாக பகிர்ந்துக்க மாட்டான். அதான் யோசனையாக இருக்கு" என்றார்.
போகும் வழியெல்லாம் நண்பனை என்ன சொல்லி தேற்றுவது என்று பலவாறு யோசித்துக் கொண்டே போனார். நண்பர் வீட்டை நெருங்கும் போது வீடே ஜே ஜே என்றிருந்தது. நாலைந்து பேர் உள்ளேயும் வெளியேயும் ஓடிக் கொண்டிருந்தனர். வீட்டில் புது மாற்றமும் தெரிந்தது. புதிதாய் நிறைய மரக்கன்றுகள் வாசலில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. 
சுந்தரத்தைக் கண்டவுடன் ராமலிங்கம் புன்னகையுடன் ஓடி வந்தார். " வா.. சுந்தரம். என்ன இந்தப்பக்கம்? ரொம்ப நாளாக ஆளையே காணோம்" என்று கூட்டிக் கொண்டு போய் ஹாலில் உட்கார வைத்தார். அவரின் இந்த மாற்றம் ஆச்சர்யமளித்தது. என்றாலும் நண்பனின் பெரும் இழப்பைப் பேச சிறிது தயக்கமாக இருந்தது. 
அவருடைய சோகத்தை திரும்பவும் கிளறக் கூடாது என்று எண்ணிக் கொண்டாலும், அவர் அதிலிருந்து மீள வேண்டும் என்று அறிவுரை கூறுவது தன் கடமை என்று நினைத்தார். தன் வீட்டிற்கு அழைக்கலாம் அல்லது ஏதாவது சுற்றுலாவிற்கு அழைக்கலாம் என்று எண்ணினார்.
சுந்தரம் பேச்சை என்னவென்று ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அவரே தொடங்கினார். " என் மகன் பறி போன பிறகு வாழவே பிடிக்க வில்லை. சோர்ந்திருந்த மனதைத் தேற்ற வழி தெரியவில்லை. வார்தா புயல் வந்து ஊரில் உள்ள மரமெல்லாம் சாய்ந்த  போது அக்கம் பக்கத்தில் உள்ள சில நல்ல உள்ளங்கள் திரும்பி மரம் நட ஆரம்பித்தனர். நானும் அவர்களுடன் இணைந்து கொண்டேன். இதோ இப்போது கூட நாங்கள் அனைவரும் இணைந்து அருகிலுள்ள பூங்காவில் மரம் நடப் போகிறோம். அதற்குத் தான் வேலை ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது" என்று புன்னகைத்தார்.
கேட்கவே சந்தோசமாக இருந்தது. அவரே தொடர்நதார்," என் மகன் போனது தீராத சோகம் தான். ஆனால்  அதிலிருந்து மீண்டு வர எனக்கு வழி தெரியவில்லை. அப்போது இந்த தன்னார்வலர்கள் இந்த சேவையில் ஈடுபட்டதைப் பார்த்து என்னை நானும் இணைத்துக் கொண்டேன்" என்றார். " நீயும் வா. உன்னால் முடிந்த உதவியைச்செய்." 
" கண்டிப்பாக " என்றபடி சுந்தரம் எழுந்தார். தான் எண்ணி வந்த வேலையை அந்த நல்ல நெஞ்சங்கள் ஏற்கனவே செய்து விட்டதை அறிந்து மகிழ்ந்தார்.நண்பனின் சோகம் தீர்க்க உதவுவதோடு பசுமையையும் உருவாக்க உதவப் போகிறோம் என்ற எண்ணமே அவருக்கு மகிழ்ச்சி அளித்தது. இருவரும் இணைந்து பூங்காவிற்குப் புறப்பட்டனர்.

Wednesday, October 26, 2016

உதவி!

" மாணவர்களே! திருக்குறள் பொழிப்புரை எத்தனை பேர் எழுதி வந்தீர்கள்?" அனைவரும் கைகளை உயர்த்தினர். அனைவரும் எழுதியிருந்தனர். அது தான் தமிழாசிரியர் முத்துவின் திறமை. அவர் என்ன கூறினாலும் மாணவ கண்மணிகள் உடனே அதை செய்து முடிப்பர். அந்த அளவு அவர் மாணவர்கள் அவர் மீது பிரியமாய் இருப்பார்கள். அவரும் அத்தனை மாணவர்கள் மீதும் பாசத்தைப் பொழிவார். இதுவரை ஒருவர் மீது கூட அவர் கடுஞ்சொல் கூறியது கிடையாது.
        கண்ணன் எழுந்து," ஐயா! நான் பொழிப்புரை எழுதியிருந்தாலும் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன ஐயா" என்றான். அவரும்," என்ன அது? கேள் சொல்கிறேன்" என்றார். 

"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
இது குறள். இதன் பொருளாவது,' பயனைக் கருதவும் செய்த உதவியின் நன்மையை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலையும் விட அளவினால் மிகப் பெரியதாகும்' என்பதாம். இந்தக்குறளில் பயன் கருதி செய்த உதவி என்று வருகிறது., உதவி செய்பவர் யாராக இருந்தாலும் அதற்குரிய பயனை எதிர்பார்ப்பார்களே ஐயா?"
" அல்ல கண்ணா! பரிசுத்தமான உள்ளம் பிரதிபலனை எதிர்ப்பார்க்காது. அதைத்தான் வள்ளுவர் அங்ஙனம் கூறுகிறார்." மாணவர்களிடம் திரும்பி," மாணவர்களே! இதோ கண்ணன் நம் அனைவரிடமும் ஒரு சந்தேகத்தைஎழுப்பியுள்ளான். இதனை உங்கள் செயல்களின் மூலமே விளக்குகின்றேன். நாளை உங்கள் அனைவருக்கும் ஒரு கடமை. இன்று மாலை பள்ளியை விட்டைச் சென்றடைந்ததும் யாருக்காவது உதவி செய்யுங்கள். அதனை நாளை காலை வந்து வகுப்பறையில் பகிருங்கள். என்ன? சரிதானா?" என்றார். மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் " சரி ஐயா" என்று உரத்துக் கூறினர். உடனேயே சளசளவென்று அருகில் பேச ஆரம்பித்தனர். ' என்ன செயவது' என்ற விவாதம் போலும். தமிழாசிரியர், " போதும்..போதும் இனி பாடத்தை கவனிக்கவும்" என்று பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.
          மறுநாள் தமிழ் வகுப்பு காலையில் இரண்டாவதாக வந்தது. ஆசிரியர் உள்ளே வந்ததும் கலகலத்துக் கொண்டிருந்த வகுப்பறை அமைதியானது. மாணவர்கள் முகங்கள் அனைத்தும் பிரகாசித்தன. முத்து புன்னகைத்துக் கொண்டார். முதலில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து விட்டு பின் மாணவர்களிடம்," மாணவர்களே! நான் நேற்று சொன்னதைச் செய்தீர்களா?" "ஓ..." அனைவரும் ஒருமித்த குரலில் கூறினார்கள். "ம்..ம்.. எங்கே ஒவ்வொருவராக அவரவது அனுபவங்களைக் கூறுங்கள்" என்றபடி தன் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
       கண்ணன்," ஐயா.. என் பாட்டிக்கு மூன்று குடம் தண்ணீர் அடித்துக் கொடுத்தேன்" என்றான். லதா எழுந்து," என் தங்கை வீட்டுப் பாடம் எழுத உதவினேன்" என்றாள். ரமேஷ்," நான் என் நண்பர்களுடன் பக்கத்து வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென்று மினசாரம் நின்று போனது. உடனே அனைவரும் பயந்து விட்டனர். நான் என் வீட்டிற்கு ஓடிச் சென்று மெழுகுவர்த்தி எடுத்து வந்து ஏற்றினேன்" என்றான். முத்து," ம்..ம். நல்லது.. வேறு..வேறு" என்றார்.
      அகிலன்," ஐயா! என் வீட்டின் அருகில் ஒரு பூங்கா உள்ளது. அங்கு மாலையில் அனைவரும் நடைப் பயிற்சி செய்வர். குழந்தைகள் விளையாடுவர். பலரும் கூடுவது வழக்கம். நான் என் தந்தையிடம் கேட்டு ஒரு கரும்பலகை வாங்கினேன். அதை அந்தப் பூங்காவில் நிறுவி, நீங்கள் கற்றுக்கொடுத்த குறளையும் அதன் கருத்தையும் எழுதினேன். பலரும் அதனை நின்று வாசித்து விட்டு சென்றனர். இனி அதை நாள்தோறும் செய்வது என் திட்டம்" என்றான்.ஆசிரியர்," பலே!" என்றார். யாழினி மெதுவாக பேச ஆரம்பித்தாள். " ஐயா! என் வீட்டில் என் தாய் தந்தையர் எனக்கு நிறைய புத்தகங்கள் வாங்கித் தந்துள்ளனர். அவற்றில் நான் படித்து முடித்துவிட்ட சிலவற்றை எடுத்து என் வீட்டின் வெளியே உள்ள சன்னலில் ஒரு பெட்டி வைத்து அதில் அடுக்கி வைத்துள்ளேன். அதன் அருகே' உங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளலாம். அதே போல் அந்தப் பெட்டியில் உங்களுக்கு தேவைப்படாத புத்தகங்களை கொண்டு வந்து வைக்கலாம்' என்று எழுதி வைத்துள்ளேன். நேற்றே எங்கள் குடியிருப்பில் உள்ள சிறுவர்கள் சிலர் என் புத்தகங்களை எடுத்துக் கொண்டு போய் தங்கள் புத்தகங்களை கொண்டு வந்து வைத்துள்ளனர். இப்போது அது ஒரு லெண்டிங் லைப்ரரியாக மாறிவிட்டது" என்றாள். "அருமை..அருமை ..உட்கார் யாழினி!"என்றபடி தமிழாசிரியர் எழுந்தார்.
     " மாணவர்களே! கவனித்தீர்களா...உதவி என்றவுடன் உங்கள் தாத்தா, பாட்டி , அம்மா, அப்பா, உறவினர் என்று பலரும் உதவி செய்தீர்கள். அதை நான் பாராட்டுகிறேன். என்றாலும் அகிலன் மற்றும் யாழினி செய்த உதவிகளில் பரந்த நோக்கும் பொது நலமும் கலந்திருப்பதைப் பார்த்தார்களா? அது போல் உதவ வேண்டும். தன்னலம் இல்லாத செயல்கள் தான் எப்போதும் பெரிதும் பாராட்டப்படும். கண்ணன்... நேற்று நீ கேட்ட கேள்விக்கு உனக்கு விடை புரிந்திருக்கும் என நினைக்கின்றேன்." கண்ணன்," நன்றாகப் புரிந்து கொண்டேன் ஐயா!" என்றான். ஆசிரியர் மேலும்,"அனைவரையும் உங்கள் செயல்களுக்காக நான் பாராட்டுகிறேன். என்றாலும், நீங்கள் அனைவரும் அகிலன் மற்றும் யாழினிக்கு கை தட்டி பாராட்ட வேண்டும்" என்றார். அனைவரும் மகிழச்சியடன் கை தட்டி தங்கள் பாராட்டைத் தெரிவித்தனர். அகிலன் மற்றும் யாழினி போல தாங்களும் தன்னலமில்லா உதவி புரிய வேண்டும் என்று உறுதி பூண்டனர்.