Thursday, March 26, 2015

ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே


நம் வாழ்வில் எத்தனையோ சுவையான சம்பவங்கள் நடக்கின்றன. சில நிகழ்வுகள் நம் மனதை விட்டு நீங்காமல் பசுமரத்தாணி போல நிலைத்து நிற்கும். சில நிகழ்வுகள் அவ்வப்போது நினைவுக்கு வந்து நிழலாடும்.
சிலவற்றை நாம் மறந்தே போவோம். ஆனால் பல சமயங்களில் புகைப்படங்களுடன் கூடிய நினைவுகளை நாம் மறப்பதே இல்லை. அப்படித்தான் என் வாழ்வில் நான் மறக்கியலாத புகைப்படச் சம்பவம் ஒன்று உள்ளது. அது ஒரு அழகிய, இனிய குட்டிக்கதை..கதை கேட்கும் விருப்புடன் எனது இளமைப் பருவத்திற்கு செல்லலாம்.


    நான் அப்போது நான்காம் படித்துக் கொண்டிருந்தேன். விநோதினி டீச்சர் தான் எங்கள் டீச்சர். எனக்கு அவர்களை ரொம்பப்பிடிக்கும். அன்பாக இருப்பார்கள், நிறைய அறிவுரை தருவார்கள். சிறுவனாக இருப்பதினால் குனிந்து என் காதருகே வந்து பேசுவார்கள். அப்போதெல்லாம் ஸ்கூல் முடிந்தவுடன் டீச்சரிடமே டூயுசனுக்கு அனுப்புவார்கள். ஒரு நாள் டீச்சர் டூயுசன் படித்த அனைவரையும் பக்கத்திலிருந்த ஃபோட்டோ ஸ்டூடியோவில் போய் குரூப் ஃபோட்டோ எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். டூயுசனில் மொத்தம் பத்து பேர் இருந்தோம். போட்டோவுக்கு இரண்டு ரூபாய் ஆகும் என்பதால் ஐந்து பேர் மட்டுமே ஃபோட்டோ எடுக்க சம்மதித்தோம்.
நாங்கள் எங்களிடம் இருந்த சிறந்த உடைகளைப் போட்டுக்கொண்டு சும்மா ஜில்லென்று போஸ் கொடுத்தோம். 
              எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.. நான் அன்றைக்கு பொட்டு வைத்திருக்கவில்லை , ஆனால் ராமசாமி வைத்திருந்தான். உடனே ஸ்டூடியோக்கார ர் உனக்கும் வைத்து விட்ட்டுமா என்று கேட்டார் . நான் ஆமாம் என்று வேகமாக தலையை ஆட்டினேன். உடனே புகைப்படத்தில் எனக்கும் ஒரு பொட்டு வைத்து விட்டார். மகிழ்ச்சியுடன் ஃபோட்டோவைத் தூக்கிக்கொண்டு ஆசை ஆசையாய் விநோதினி டீச்சரிடம் கொண்டு போய் காட்டினோம். அவர்கள் எங்கள் பெயர்களை அழகாக எழுதி தேதியிட்டுக் கொடுத்தார்கள்.இதில் ஆச்சர்யம் என்னவென்றால் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ஐவரையும் மிகத் துல்லியமாக ஞாபகம் இருக்கும் எனக்கு என்னுடன் டூயுசன் படித்த ஏனைய ஐவர் துளியும் நினைவில்லை. எங்ஙனம் ஞாபகப்படுத்தினாலும் நினைவில்லை. எல்லாம் அந்த ஃபோட்டோ செய்த மந்திரம்.
             அதன்பின் காலங்கள் எவ்வளவோ மாறிவிட்டன. ஒரே ஊரில் இருந்தாலும் நாங்கள் அடிக்கடி சந்திக்கவில்லை. வியாபாரம், திருமணம், குழந்தைகள், படிப்பு என்று திசைக்கொரு பக்கமாய் ஓடிக்கொண்டே இருந்தோம். சுமார் நாற்பத்தி ஐந்து வருடங்கள் கழித்து ஒரு திருமணத்தின் போது அனைவரும் சந்தித்தோம். பழைய நினைவுகளை மெல்ல அசை போட்டோம். அப்போது போலவே இப்போதும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். எங்களுக்குள் இருந்த குழந்தைத்தனம் வெளிப்பட்டது.


                பின் அவ்வப்போது சந்தித்தோம்.
இப்போது ஐவரும் டீச்சரை சந்தித்தால் என்ன என்று ஒரு நாள் தோன்றியது. ஆனால் டீச்சரைக் கண்டுபிடிப்பது எப்படி? 
எங்கே இருப்பார்களோ? எப்படி இருக்கிறார்களோ? சந்திக்க விரும்புவார்களோ என்னவோ?நினைவிருக்குமோ ? சரி, முயன்று பார்க்கலாம் என்று அறிந்த தெரிந்த ஆசிரியர்களிடம் விநோதினி டீச்சர் பற்றி கேட்கலானோம். 7A செல்வராஜ் வாத்தியார் தான் உடனே நினைவுக்கு வந்தார். அவரைப் பற்றி ஒரு வார்த்தை -வகுப்பறையை lively ஆக்குவதில் அவருக்கு நிகர் அவரே. ஒரு முறை row row a boat பாடலைக் கற்பிக்கும் போது மாணவர்களை டெஸ்க்கின் மீது அமர்ந்து கொண்டு துடுப்பு போடச் சொன்னார்.நாங்கள் அவருடைய வகுப்புகளை ரொம்பவே விரும்பிப் படித்தோம். அவர் என்னுடைய பழைய நண்பனான ஏஞ்ஜல் ஐ தொடர்பு கொண்டால் விநோதினி டீச்சரை சந்திக்கலாம் என்றார். காரியம் எனக்கு சுளுவாயிற்று. என் தோழன் ஏஞ்ஜல் விநோதினி டீச்சரின் சகோதரியின் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்துக் கொடுத்தான். அவர்களிடம் பேசி டீச்சர் பற்றிய விபரம் அறிந்தோம். தொலைபேசி எண்ணையும் பெற்றுக் கொண்டோம். டீச்சர் இப்போது ரிடையர் ஆகிவிட்டார்கள். திருநெல்வேலியில் இருக்கிறார்கள் . உடனே அவர்களுக்கு ஃபோன் போட்டு பேசினோம். அவர்களுக்கு நினைவில்லை.
                டீச்சர் எங்கள் புகைப்படத்தில் கையெழுத்திட்ட நாள் 16-3-1969. அதே நாளில் இந்த வருடம் போய் சந்தித்தால் என்ன என்று தோன்றியது. ஆனால் திரதிர்ஷ்டவசமாய் அன்று திங்கட்கிழமையாய் இருந்தது. அனைவருக்கும் அலுவல் இருக்குமே. சரி, முந்தையான நாளான ஞாயிற்றுக்கிழமை 15-3- 2015 அன்று போகலாம் என்று முடிவு செய்தோம். சுதர்சனால் வர முடியவில்லை, மற்ற மூவரும் சிவகாசியிலிருந்தும் நான் சென்னையிலிருந்தும் கிளம்பினோம். ஏதோ ஜோராக்க் கிளம்பி விட்டோமே தவிர எங்களுக்குள் ஒரு சின்ன சந்தேகம் இருந்தது. அதே டீச்சர் தானா என்று. தெருமுனை வரை வந்து டீச்சரின் கணவர் வரவேற்றார் . சந்தேகத்துடனே அவருடன் நடை பயின்றோம்.டீச்சர் வீடு மாடியில் போல ., மாடியில் நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அதே முகம். எங்கள் ஐயம் தீர்ந்தது. அன்று பார்த்தது போலவே இன்றும் இருந்தது , என்ன தலை தான் நரைத்திருந்தது. 



          டீச்சரை சந்தித்தோம். அவர்களுக்கு எங்கள் பெயர் நினைவில்லை. சுதர்சன் அவர்களுக்கு பக்கத்து வீடாம் அவனை நினைவு கூர்ந்து கேட்டார்கள். வேறு முக்கியமான அலுவல் காரணமாக அவன் வரவில்லை என்று தெரிவித்தோம். எங்களைக் கண்டு ஆனந்தப்பட்டார்கள். ஆச்சரயப்பட்டார்கள். சொல்லி சொல்லி மாய்ந்து போனார்கள். எத்தனையோ வருடங்களுக்கு முன் எப்போதோ டியூசன்படித்ததை நினைவு கூர்ந்து, தன்னைப்பார்க்க வந்ததை எண்ணி நெகிழ்ந்து போய்விட்டார்கள். அப்போது எடுத்த புகைப்படத்தையும் இப்போது எடுத்த புகைப்படத்தையும் காட்டினோம். ஆவலுடன் வாங்கிப் பார்த்தார்கள். அப்போது அந்தப் புகைப்படத்தில் பெயர் எழுதிக் கொடுத்ததைப் போல இதில் கையெழுத்திட்டுக் கொடுத்தார்கள். நாங்கள் வருகிறோம் என்று அக்கம் பக்கத்திலிருந்தவர்களிடம் சொல்லி இருப்பார்கள் போலிருந்தது. சிலர் வந்து எட்டி எட்டி பார்த்து விட்டுச்சென்றனர். டீச்சரின் கணவர் நன்றாக அளவளாவிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து நாங்கள் வாங்கிச் சென்ற பரிசை கொடுத்து விட்டு கிளம்பினோம்.

         
P.S. ராமசாமிஅவர்களின் பார்வையிலிருந்து:
   டீச்சரை சந்தித்து விட்டு வந்ததிலிருந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளேன். என் நண்பர்கள், உறவினர்கள் அனைவரிடமும்இதைப் பற்றிக் கூறினேன். என் அக்காவும் விநோதினி டீச்சரும் ஒன்றாகப் படித்தவர்களாம் . அவர்கள் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தைக் கொண்டு போயிருந்தேன். அதை டீச்சரிடம் காட்டினேன். உடனே அவர்கள் உற்சாகமாகி விட்டார்கள். பழைய நினைவுகளை அசை போட்டார்கள். இருவரும் ஃபோனில் பேசிக் கொண்டார்கள். பழைய நட்பு ஒன்று மறுபடியும் பூக்கக் கண்டு மகிழ்ந்தேன். நான் போய் வந்த இரண்டொரு நாட்களில்  என் அக்காவும் போய் டீச்சரை சந்தித்து விட்டு வந்துவிட்டார்கள். இப்போது அவர்களது நட்பு தொடர்கிறது. 



சுதர்சன் அவர்களது பார்வையிலிருந்து:
 
பொதுவாக Batch Meet என்று பள்ளியில் படித்த நண்பர்கள் அனைவரும்
 சந்தித்து ஆசிரியர்களை கௌரவிப்பது வழக்கம். நானே என்னுடைய ஆசிரியர்களை 2003 இல் ஒரு பெரிய get together போட்டு கௌரவித்துள்ளோம். ஆனால் தனியொரு டீச்சரை இப்படி டூயுசன் படித்த ஐவர்மட்டும் கௌரவிப்பது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். இந்த நட்பு கொஞ்சம் வித்தியாசமானது. ராமசாமி வீட்டுத் திருமணத்தின் போது நாங்கள் ஐந்து பேரும்நின்று புகைப்படம் எடுத்தது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. பல பேர் என்னிடம்,' என்ன ஸ்பெஷல்?நீங்கள் ஐந்து பேரும் நின்று நின்று தனியாக ஃபோட்டோ எடுக்கிறீர்கள் ?' என்று கவனித்து கேட்டார்கள். கேட்ட அனைவருக்கும் நாங்கள் டூயுசன் படித்த கதையையும் புகைப்படம் எடுத்த கதையையும் சொன்னோம். அன்றைய தேதியில் டீச்சரை சந்திக்க முடியாமல் போனது எனக்கு மிகப் பெரிய வருத்தம். விரைவில் என் குடும்பத்தாருடன் போய் அவர்களை சந்திப்பேன்.


பகீரதன் அவர்கள் பார்வையிலிருந்து:
 
அந்தப்புகைப்படத்தில் நான்கு பேரும் பேண்ட் அணிந்திருப்பார்கள். நான் மட்டும் ஷார்ட்ஸ் அணிந்திருந்தேன். என்னிடம் அப்போது பேண்ட் இல்லை. என்னால் யாரிடமும் கடன் வாங்கவும் முடியவில்லை. அப்போது எனக்கு அது வருத்தமாக இருந்தது நம்மால் பேண்ட் போட முடியவில்லையே என்று. ஆனால் அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போது மிகச் சந்தோசமாக இருக்கிறது. நாம் மட்டும் வித்தியாசமாக ஷார்ட்ஸ் அணிந்திருக்கிறோமே என்று. மேலும் ஒரு கூடுதல் தகவல். நான் காலேஜ் போகும் போதுதான் பேண்ட் அணிந்தேன். அப்போதெல்லாம் பேண்ட் போடுவதென்றால் பெரிய விஷயம். ஆனால் இப்போது அப்படியா? இரண்டு மாதக் குழந்தைக்கும் கூட பேண்ட் உள்ளது. மற்றொரு முக்கியமான விஷயம் டீச்சர் நாங்கள் சந்திக்க சென்ற போது Sunday church செல்வதைக்கூட எங்களுக்காக ஒதுக்கி வைத்து விட்டு காத்திருந்தார்கள். அதை எங்களால் மறக்க முடியாது.



டாக்டர் பொன்னுதுரை அவர்களின் பார்வையிலிருந்து:
 
 பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் கூட நான் கொஞ்சம். பக்கத்து கிராமங்களுக்கு சென்று மருத்துவ சேவை ஆற்றுவேன். ஆனால் விநோதினி டீச்சர் என்றவுடன் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பி விட்டேன். டீச்சர் மிகவும் அன்பானவர்கள். நிறைய அறிவுரை கூறுவார்கள். டீச்சர் வீட்டுக்கு நான் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட விளையாடச் செல்வேன். அவர்கள் வீட்டில் அவர்கள் வீட்டுப் பையன் போல அமர்ந்து அனைத்தும் செய்வேன். டீச்சர் ஏதாவது கடைக்கு போகச்சொன்னால் ஓடிஓடி செய்வேன். அது எனக்கு சொந்த வீடு போல இருந்தது. இப்போது நாற்பத்தைந்து வருடங்கள் கழித்து சந்தித்த போதும் அவர்களுக்கு அதே குரல். இன்னும் மாறாமல் இருந்தது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர்களுடைய அறிவுரைகளை நான் என்றும் மறக்க மாட்டேன்.



விநோதினி டீச்சர் அவர்களின் பார்வையிலிருந்து:
என்னால் இதை நம்பவே முடியவில்லை. எப்பவோ நான் சின்ன வயதில் இவர்களுக்கு நான்காம் வகுப்பு எடுத்தேனாம். ஒரு புகைப்படத்தை வைத்து இணைந்து என்னைத் தேடி வந்துள்ளனர். இவர்களில் ஒருவனை மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது. பக்கத்து வீட்டு சுதர்சன். மற்றவர்களின் பெயர் மட்டுமே நிழலாடுகிறது. முகம் நினைவில்லை. அது போகட்டும். இவ்வளவு தூரம் நினைவு கொண்டு என்னைத்தேடி வந்து சந்திக்குமளவுக்கு இவர்களுக்கு நான் என்ன செய்து விட்டேன்? இப்போது தான் நான் செய்து வந்த தொழிலின் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதையே ஏற்படுகிறது.
          எனக்கு திருமணமான பின் பல ஆண்டுகள் சென்னையில் பணியாற்றினேன். பின் ரிடையர் ஆகிவிட்டேன். இப்போது ஓய்வு காலத்தில் மகள் இருக்கும் திருநெல்வேலிக்கே வந்துவிட்டேன்.
அக்கம் பக்கத்தில் இருக்கும் அனைவருக்கும் ஆச்சர்யமான ஆச்சர்யம். என் கணவருக்கோ இதை நம்ப முடியவில்லை. நானும் எத்தனையோ பேரை சந்தித்துள்ளேன் , ஆனால் நான்காம் வகுப்பு ஆசிரியையை நினைவு கூர்ந்து இவ்வளவு தூரம் வந்தவர்களை நான் உளமாற பாராட்டுகின்றேன் என்றார். இனி நாள்தோறும் நான் ஜெபிக்கையில் இந்தக் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என்னுடைய பிரார்த்தனையில் நிச்சயம் இடம் பெறுவார்கள்.


இறுதியாக....
     
  ஆசிரியப் பணி தெய்வீகமானது. மாணவர் ஆசிரியர் பந்தம் என்பது உணர்வு பூர்வமானது. 'எங்கள் ஆசிரியரை விட எங்களுக்கு அதிகம் தெரியும் ' என்று சந்தர்ப்பம் கிடைக்கும் வேளைகளில் எல்லாம் பறைசாற்றிக்கொண்டிருக்கும் இக்காலத் தலைமுறையினருக்கு இந்த உணர்வு பூர்வமான பந்தம் புரியாது. 
            நாம் வாழ்வில் முன்னேறி பெரும் பதவிகளையும் அல்லது பேறுகளையோ அடையும் போது நம்மைப் பார்த்து மகிழும் சில தூய உள்ளங்கள் உண்டு. ஒன்று நமது பெற்றோர். அது இரத்த பந்தம், அதனால் அவர்கள் ஆனந்திப்பது இயல்பு. அடுத்தது ஆசிரிய பெருமக்கள். தம் மாணவர்கள் தங்களை மிஞ்சினால் அவர்களை விட ஆனந்தப்படுபவர் வேறு எவரும் இல்லை. ஆசிரியர் என்பவர் மனதளவு நன்றிக்கும் , செயலளவு மரியாதைக்கும் உருத்துடையவர் ஆவர்.விநோதினி டீச்சர் அவர்களைச் சந்தித்தது என் வாழ்வின் பெரும்பேறாக கருதுகிறேன். வாழ்வின் மறக்க முடியாத நாள்.
               என்றென்றும் ஆசிரியர்கள் மீது
              மிகுந்த மரியாதைவைத்திருக்கும்
                       ரவி.
----------------------------------------------------------------------------------------


                                                           Sincere thanks to

ANGEL PHILOMEN7A SELVARAJ SIR

     


Tuesday, March 10, 2015

வாழ்க்கைக் கற்றுத்தந்த பாடங்கள்


       கற்றல் என்பது பள்ளியுடனோ அல்லது கல்லூரியுடனோ அனைவருக்கும் நின்று விடுவதில்லை. வாழ்க்கை நமக்கு நாள்தோறும் அனுபவங்கள் என்ற பெயரில் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது. ஆனால் நாம் தான் அவற்றை கவனிப்பதில்லை. அதனை உன்னிப்பாக கவனித்தால் கற்றுக்கொள்ள முடியும்.மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றும் கற்றுக்கொள்ள இயலாது. 
        நாம் செய்யும் தவறுகளே நமக்கு அனுபவ பாடங்கள். ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால் வருந்தாதீர்கள். அந்நிகழ்ச்சி நமக்கு ஒரு பாடம் என்பதை உணருங்கள். நம் அனைவருக்கும் ஒரு பழக்கம் உண்டு . எதையாவது தவறாகச் செய்து விடுவோம் . பின் பதறுவோம், வருத்தப்படுவோம். ஐயோ இப்படி நடந்துருச்சே என்று கவலைப்படுவோம். அந்த extra baggageஐ சுமந்து கொண்டே இருப்போம். ஒரு பொருளைத் தவற விடுகிறோம், அதற்குப் பின் வருத்தப்பட்டால் அது என்ன திரும்பவா 
 கிடைக்கப்போகிறது? அதற்குப்பின் ஆக வேண்டிய காரியத்தை கவனிக்க வேண்டியது தான்.


          இப்படித்தான் நான் காலேஜில் படிக்கும் போது ஏதோ தவறு செய்து விட்டேன். எப்போதும் துரு துருவென்று இருக்கும் நான் அன்று சோகமே உருவாக உட்கார்ந்திருந்தேன். என்னுடைய ஃபேவரிட் லெக்சர்ர் அதை கவனித்து விட்டார்கள். வகுப்பில் சுரத்தே இல்லாமல் நான் அமர்ந்திருப்பதைப் பார்த்து ஏன் என்ன ஆயிற்று என்று கேட்டார்கள். நான் நடந்ததைக் கூறினேன். "Don't worry ! What is done cannot be undone ! Leave it !" என்றார்கள். அது என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. அன்றிலிருந்து ஒன்று உணர்ந்து கொண்டேன். நடந்து முடிந்தவை நடந்து முடிந்தவை தான். அதை மாற்ற முடியாது. அதை நினைத்து நினைத்து வருந்தாமல் அடுத்து ஆக வேண்டியதைக் பார்க்க வேண்டும். என்ன , திரும்பவும் அதே தவறை செய்யாமல் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நான் இப்போது கூட அவருடைய வார்த்தைகளை அவ்வப்போது நினைவு கூர்ந்து மனதை திடப்படுத்திக் கொள்வேன்.

               பொதுவாக அடக்கம், அமைதி, பண்பு என்ற பெயரில் நமக்கு நன்றாகத்தெரிந்ததைக் கூட நாம் பறை சாற்றிக் கொள்வதில்லை. ஒரு சின்ன தயக்கம் நம்முள் எப்போதும் எட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கும். இதற்குக் காரணம் நமது வளர்ப்பு முறையா அல்லது கலாச்சாரமா? பட்டி மன்றம் வைத்து தான் அதன் பதில் கண்டு பிடிக்க வேண்டும். ஒரு உதாரணத்துடன் விளக்குகிறேன்..ஒரு கூட்டத்தில் அமர்ந்திருக்கிறோம். ஒரு கேள்வி கேட்கப் படுகிறது. நமக்கு விடை தெரிகிறதென்றே வைத்துக் கொள்வோம், உடனே எழுந்து அதனை உரக்க அறிவிக்கத் தயங்குவோம். தவறாயிருந்தால் என்ன? முயல்வதே சாதனை தானே? எல்லோருக்கும் தவறு வருவது உண்டு தானே? ஆனால் அனைவரும் அப்படிச் செய்வதில்லை. மௌனம் காப்போம். யாராவது ஒருவர் விடையளித்த பின் ஐயோ விடையை முதலில் கூறியிருக்கலாமே என்று தோன்றும். இந்தத் தயக்கம் என்றென்றும் தொடரும். நம்மை நாமே அறிமுகப் படுத்திக் கொள்ளும் போது கூட நமக்குத் தெரிந்ததைப் பெருமையாக வெளியிட மாட்டோம். நம் பெருமையை நாமே பேசக்கூடாது , சுய தம்பட்டம் கூடாது என்று சிறு வயது முதலே போதிக்கப்பட்டதுதான் இதற்குக் காரணம். ஆனால் இந்த எண்ண ஓட்டமே தவறு என்று எனக்கு பொட்டில் அடித்தாற்போல British Council இல் போதித்தார்கள். அங்கு ஒரு spoken English course பயின்றேன். அப்போது அவர்கள் சொன்னார்கள் " உங்கள் திறமைகளைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரியாது. நீங்கள் தான் அவற்றை எடுத்துரைக்க வேண்டும். "You should blow you own trumpet .. No one will do that for you."
அது என் வாழ்வில் நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடமாகும். அன்றிலிருந்து என் திறமை என்று நான் நினைப்பவற்றை வெளியிடத் தயங்குவதில்லை.

       சில விஷயங்கள் நமக்கு கை கூடி வருவதில்லை. எத்தனை முறை முயன்றாலும் தோல்வியே அடைவோம். உடனே அது வேலைக்கு ஆகாது என்று விட்டுத் தள்ளி விடுவோம். ஆனால் அப்படி விடக்கூடாது. தொடர்ந்து முயன்று கொண்டே இருக்க வேண்டும். முதலில் தப்பும் தவறுமாக வருவது நாளடைவில் திருத்தமாக வந்து விடும். இதுவும் எனது அனுபவ பாடம் தான். அப்போது அருணாவுக்கு இரண்டு வயது. அவளை pre kg யில் சேர்த்து விட்டு நான் ஒரு கிளாஸில் சேர்ந்தேன் . காலையில் பத்து மணிக்கு க்ளாஸ் . வீட்டில் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு கிளம்ப கஷ்டமாக இருந்தது. சாரிடம் இரண்டு நாட்கள் கழித்து வரக் கஷ்டமா இருக்கு என்றேன். அதற்கு அவர் முதலில் அப்பிடித்தான் இருக்கும் . ஒரு வாரம் கழித்து பழகி விடும் என்றார். அதே போல் ஒரு வாரம் கழித்து பழகி விட்டது. சுலபமாக கிளம்ப ஆரம்பித்து விட்டேன். எந்த ஒரு விஷயத்திற்கு பயந்து நாம் ஒத்திப் போடுகிறோமோ அதை அடிக்கடி எதிர் கொள்வது பயத்தை தணிக்கும். பயம், இயலாமை போன்றவை முடிவை நோக்கிய பயணம். வெற்றியை நோக்கி நாம் பயணிக்க வேண்டுமானால் இவற்றைப் புறந்தள்ள வேண்டும். 

          அதே போல் மற்றொரு விஷயம் ..நாம் விரும்பும் அனைவரது வாழ்விலும் நாமே வியாபித்து இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவர்களது பிரச்னைகளை நம்முடையவை என்று நினைத்து கவலைப் படுவதும், அவர்கள் முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் அவர்களுக்காக நாம் முடிவெடுப்பதும், தெரியாத பிரச்னைகளுக்கு எல்லாம் தெரிந்தது போல் முடிவு சொல்வதும் நாம் அன்றாடம் அனைவர் வாழ்விலும் பார்க்கக்கூடியது. இதற்கெல்லாம் நமது சமூக , சமுதாய கட்டமைப்பே காரணம். பெரியவர்களுக்கு எல்லாம் தெரியும், முடிவை அவர்கள் கையில் கொடு என்று நாம் தொடர்ச்சியாக போதிக்கப்படுவதும் ஒன்று. உண்மையில் இந்த போக்கு தவறானதாகும்.சிறு வயது முதலே நாம் நம் குழந்தைகளுக்கு போதிய சுதந்திரம் கொடுத்து அவர்களது முடிவெடுக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவர்களது உண்மையான திறன் என்னவென்பதை கண்டுபிடித்து அவர்கள்
 அதில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும் . ஆனால் இன்று பரவலாக நடப்பது என்ன? பெற்றோர் தங்கள் விருப்பத்தை குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். அவர்கள் என்ன படிக்க வேண்டும் என்று ஒரு பதினெட்டு வயது , தானே முடிவெடுக்கக்கூடிய அதற்குரிய திறன் படைத்த , இளைஞன் அல்லது இளைஞி யைக் கட்டாயப் படுத்துகின்றனர். ஆனால் இந்தப் பாச்சாவெல்லாம் எங்கள் வீட்டில் பலிக்காதுங்க... அருணா( என் மகள்) -அவளைக் கட்டாயப் படுத்தினால் உடனே "...மாஆஆ I know what to do , I know I am doing !" என்று என்னை வாயடைத்துவிடுவாள்.

       இப்படியாக என் வாழ்வில் என் உற்றார் உறவினர் , நண்பர்கள் , ஆசிரியர்கள் மூலம் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம் . வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்தது அல்ல. சுலபமானது, இன்பமானது, இது போல் அனுபவ பாடங்களை அழகியலோடு ஏற்றுக்கொண்டால் .... நீங்களும் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் கூறுவதைக் கொஞ்சம் உற்று கவனியுங்கள் , பல சுவை பொதிந்த பொக்கிஷ அறிவுரைகள் கிடைக்கும். 


              

Monday, March 9, 2015

Why I am a feminist

           This time  my daughter makes a guest appearance in my blog .. Hope you will all love it!

               Why am I a feminist? Why do I question the society? I ask myself everyday.

                My dad taught me everything he knows, let it be technical aspects of his work, his travel logs, love your work talks, freedom, forgiveness. Whenever I do something, my mom comments, “Oh God!! Why are you like your dad? One of him is enough”. I am proud to be his daughter.

                I grew up with a bunch of cousins who lived next door. We fought with each other, shared our clothes, toys, and foods and commented on movies too. I remember one incident where all of us created similar email ids for the first time. The Diwali’s, Pongal’s, new years were unforgettable. Being with them made me strong, determined and ambitious.

                 My parents made my birthdays a celebration. Not just for the three of us but for a big family and friends circle. Even today I get wishes from people who I least expect to remember, let alone wish me. These made me feel special and drive me to make them special too.

                  Like everybody, I had friends, a lot of friends. Some are still in my life and some are not. I learnt something from each and every friend. My friends taught me to drive, love, be expressive, speak English, empathize, not be judgmental, how to behave when cops caught you. One even taught me how to be safe while traveling in hired vehicles.

                  Being married changed a lot in my life. Freedom had a different meaning. For a person who fought her battles alone, I had an ally, my husband.

                  Writing about my mom in her blog seems pointless. For everyone who knows her, you know how remarkable, loving, knowledgeable, fearless and brave she is. She is my inspiration and role model.

                Why am I telling you all this?? Oh yes! Why am I a Feminist.Well I really don’t knw why am I a feminist but I can give you a lot of “May Be’s”.

May be because my parents repeated, “You Can Do                     

              Anything, Neeraja” when I grew up.  

May be because instead of just listening to her elders 

              talking about numerology or horoscope my 

              mom named me after Neeraja Bhanot, a Pan  

              Am Purser who was shot down while shielding 

               3 children in 1986 during the PA73 hijack.

May be because my sister looks up to me.

May be because my mom is the strongest person I know 

              in the world. (I’m not kidding we call her Macho 

              Mom)

May be because I keep hearing, “She’s just a 

              Housewife”, “She’s just a woman”, “Its bad for a    

              woman to have attitude”.

May be because even in 2015 I hear people saying, “I   

             need a son to complete my family”.

May be because in this society where a daughter is        

              taught to cover her body because it provokes    

              men, while a son is not taught to catcall, abuse       

              or rape women.

May be because even though there is legal ban against    

              Child marriage, Polygamy, Rape and Dowry, we 

              tend to ignore them and request ban on      

              Comedy Shows, Rape Documentary and    

              eating Beef.

May be because being a Cow in our country will gain us             

             more respect than being a woman.

May be because even a literate lawyer goes in front of    

             an international camera and says “Indian society         

             has no place for woman”.

May be because, what happened to Joythi Singh might 

              happen to us next, or worse our daughters.

May be because we lost our respect from other    

              countries.

May be because we value our traditions and honor and     

               pride more than the happiness and safety and 

               right of our country.

                   After all the things happening in our country, on 8th March we still celebrated International Women’s Day without even a glitch of hesitant. I was ashamed to celebrate Women’s Day. I am enraged and ashamed.  


Why am I a Feminist? I can keep listing you with reasons but even without a reason “I am a Feminist”.

                                                                 - Neeraja Navin.