Sunday, October 16, 2016

குழந்தைப்பாடல்..

காட்டில் உள்ள சிறுத்தை
நாட்டில் புகுந்து சேதம்!
செய்தி கேட்டு மனம்
மெய்யோ என வருந்தியது.

யானைக் கூட்டம் சிலவும் இரயில்
பாதையை கடக்க முற்பட்டு
மாண்டே விட்டனர்  என்றறிந்தவுடன்
கல்லாய் மனம் கனத்தது.

காட்டு விலங்கு யாவும்
நாட்டினுள் புகுந்து நாசம்!
நித்தம் மக்கள் புகார் என்றும்
சத்தமாக உலகம் வம்பளக்கின்றது.

ஒன்றை மறந்துவிட்டாய் மனிதா
கானகத்தின் உள்ளே நீ சென்று
அவற்றை உறைவிடத்தை நீ சிதைத்தாய்!
இப்போது அவை அழிக்கின்றன ஊரகத்தை.

பூமி உருண்டை மொத்தமும் உனக்கல்ல!
புவியில் வாழ அனைத்திற்கும்
சமமான உரிமை இங்குண்டு!
சடுதியில் உணர்ந்திடு மனிதகுலமே!
 
விலங்கு இனமும் மனித இனமும்
இணைந்தே பூவுலகில் வாழவேண்டும்.
இயற்கையை அழித்து ஆதிக்கம் செலுத்தினால்
இன்னல்கள் ஆயிரம் உண்டு, உணர்ந்திடு !




3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. அட!கவிதை....குழந்தைகளுக்கான பாடல் அருமைப்பா

    ReplyDelete