Friday, June 17, 2016

சாலைப் போக்குவரத்து விதிகள்..

ஆண்டுதோறும்  சம்பிரதாயச் சடங்காக வந்து செல்லும் " சாலை பாதுகாப்பு வாரம்" இந்த ஆண்டும் வந்து சென்றது. வழக்கம் போலவே ஆயிரக்கணக்கில் வாகனங்கள் சிட்டாய்யப் பறக்கின்றன. விதிமுறகள் மீறப்படுகின்றன.. நாளிதழ்களை விரித்தால் விபத்துச்செய்திகள் நம்மை பயமுறுத்தும் வண்ணம் வந்து கொண்டே இருக்கின்றன. சாலைபாதுகாப்பு என்பது பல காரணிகளை உள்ளடக்கியது. சீரிய சாலைகள், அளவான வாகனங்கள், போக்குவரத்து விதிகள் தெரிந்த ஓட்டுநர்கள், குறைந்த அளவு மாசு உண்டாக்கும் வாகனங்கள் என இன்னும் பட்டியல் நீளும். ஆனால் இங்கு எல்லாமே தலைகீழ். குண்டுகுழியுமான சாலைகள், பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இல்லாத சப்வேகள், அவசரகதியில் இயங்கும் ஓட்டுநர்கள், அதிகமான, எதிர்பாராத இடத்தில் வேகத்தடைகள், சாலை சந்திப்புகளில் போதிய அடையாள குறியிட்டுப்பலகைகள் இல்லாமை என்று அனைத்தும் அச்சுறுத்துகின்றன. எனினும் ஒரு சிறு முயற்சியாக சாலை விதிகளை நாம் அனைவரும் தெளிவுற தெரிந்து கொள்வது நலம்.

சாலை விதிகள் குறித்த முக்கிய தகவல்கள் 

1.இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல் மெட்டல் அணிவது அவசியம்.
2.சாலையில் நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால்,போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வாகனங்களை சாலையில் ஓரமாக நிறுத்த வேண்டும்.
3.நடந்து செல்பவர்கள் நடைமேடையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
4.வாகன ஓட்டிகள் சிக்னல்களை மதித்து செயல்பட வேண்டும்.
5.மதுபானம் அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது.
6.உரிம்ம் பெறாதவர்கள் வண்டி ஓட்டக்கூடது.
7.அதிக வெளிச்சம் தரக்கூடிய பல்புகளை எரிய விடுவதால் ,எதிரே வரும் வாகன ஓட்டங்களுக்கு கண்கள் கூசி, விபத்துக்கு வழிவகுக்கின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்.
8.பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம். 
சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும். 
சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது. 
ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள். 
9.ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத வேண்டும். 
10.ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது. 
11.கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும். 
12.நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும். 
வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும். 
13.கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும். 
14.நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்கள் வெளியிடும் கரிமிலாவாயுவான கார்பன் டை ஆக்சைடை அதிகம் உறிஞ்சிக் கொள்கிறது. அத்தோடு விலங்குகளும் இவற்றை உண்பதில்லை. 
15.நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு'இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். 

No comments:

Post a Comment